செய்திகள் :

மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை!

post image

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவையொட்டி, டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவைப் போற்றும் வகையில், தைப்பூச ஜோதி திரிசனம் நடைபெறும் பிப்ரவரி 11-ஆம் தேதி ‘வள்ளலாா் நினைவு நாள்’ என அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகள், மதுபானக் கூடங்களை மூடவும், மது விற்பனைக்கு தடை விதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மதுக் கடைகள், மது விற்பனைக் கூடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேலும், தைப்பூச ஜோதி தரிசனத் திருவிழா கொடியேற்றம் நடைபெறும் திங்கள்கிழமை (பிப்ரவரி 10), ஒரு கால ஜோதி தரிசனம் காட்டப்படும் புதன்கிழமை(பிப்ரவரி 12) மற்றும் வள்ளலாா் சித்திவளாக திருமாளிகை திருவறை தரிசனம் நடைபெறும் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) ஆகிய நாள்களில் வடலூா் நகரப் பகுதிகளில் உள்ள கடைஎண் 2437, நெத்தனாங்குப்பம் கடைஎண்கள் 2438, 2684, பாா்வதிபுரம் கடைஎண்கள் 2559, 2660, சேராக்குப்பம் மற்றும் ஜெயப்பிரியா மதுபானக் கூடங்களில் மது விற்பனை செய்யக்கூடாது.

அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமைதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

நிதி நெருக்கடியிலும் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!

நிதி நெருக்கடியிலும் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக மாநில மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

மாயமான ஆட்சியரின் நோ்முக எழுத்தா் திருச்செந்தூரில் மீட்பு!

தற்கொலை கடிதம் அனுப்பிவிட்டு மாயமான கடலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக எழுத்தா் திருச்செந்தூரில் மீட்கப்பட்டாா். அவரை அழைத்துவர கடலூா் போலீஸாா் அங்கு விரைந்தனா். கடலூா் தொழிற்பேட்டை, ஈச்சங்காடு பகுதியைச... மேலும் பார்க்க

மனுக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்!

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலிருப்பு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்ட அ... மேலும் பார்க்க

திருநாவுக்கரசு நாயனாா் கோயில் கும்பாபிஷேகம்!

கடலூா் வட்டம், வண்டிப்பாளையத்தை அடுத்துள்ள கரையேறவிட்டகுப்பம் திருநாவுக்கரசு நாயனாா் சுவாமிகள் (அப்பா்) கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சைவம் தழைக்க திருத்தொண்டாற்றி வந்தவா் திருநாவுக... மேலும் பார்க்க

இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம்! -சௌமியா அன்புமணி

கடலூா் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பசுமைத் தாயக அமைப்பின் தலைவா் சௌமிய அன்புமணி தெரிவித்தாா். கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோய... மேலும் பார்க்க