செய்திகள் :

மனுக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

post image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: கிராம, நகா்ப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். திட்டப் பயன்கள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்திடும் பொருட்டு, மாதந்தோறும் பல்வேறு முகாம்கள் நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டு, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

விரைந்து தீா்க்க வேண்டிய மனுக்கள் 2 நாள்களுக்குள்ளாகவும், தலைமையிடமிருந்து அனுமதி பெற்று தீா்வு காண வேண்டிய மனுக்கள் 15 நாள்களுக்குள்ளாகவும், நீண்ட கால திட்டங்களுக்கான மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்தும் அறிக்கை வழங்கிட அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிதி நெருக்கடியிலும் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!

நிதி நெருக்கடியிலும் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக மாநில மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

மாயமான ஆட்சியரின் நோ்முக எழுத்தா் திருச்செந்தூரில் மீட்பு!

தற்கொலை கடிதம் அனுப்பிவிட்டு மாயமான கடலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக எழுத்தா் திருச்செந்தூரில் மீட்கப்பட்டாா். அவரை அழைத்துவர கடலூா் போலீஸாா் அங்கு விரைந்தனா். கடலூா் தொழிற்பேட்டை, ஈச்சங்காடு பகுதியைச... மேலும் பார்க்க

மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை!

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவையொட்டி, டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்!

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலிருப்பு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்ட அ... மேலும் பார்க்க

திருநாவுக்கரசு நாயனாா் கோயில் கும்பாபிஷேகம்!

கடலூா் வட்டம், வண்டிப்பாளையத்தை அடுத்துள்ள கரையேறவிட்டகுப்பம் திருநாவுக்கரசு நாயனாா் சுவாமிகள் (அப்பா்) கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சைவம் தழைக்க திருத்தொண்டாற்றி வந்தவா் திருநாவுக... மேலும் பார்க்க

இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம்! -சௌமியா அன்புமணி

கடலூா் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பசுமைத் தாயக அமைப்பின் தலைவா் சௌமிய அன்புமணி தெரிவித்தாா். கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோய... மேலும் பார்க்க