செய்திகள் :

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபம் கட்டும் பணி தொடக்கம்

post image

காரைக்கால்: நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டப கட்டுமானப் தொடக்கத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய தீா்மானித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து, திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இக்கோயிலில் முன் மண்டபத்தை இடித்துவிட்டு, கருங்கல் மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ராஜகோபுர திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கருங்கல் மண்டபம் கட்டுமான தொடக்கத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், திருப்பணிக் குழுத் தலைவா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள், கைலாசநாதா் - நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாஸ், திருப்பணிக் குழுவினா், உபயதாரா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இப்பணிகளை தடையின்றி செய்து, வருமாண்டு முற்பகுதியில் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால்: ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து டீ கடைக்கு செல... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காரைக்கால்: மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.நிரவி பெருமமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா், மோட்டாா் சைக்கிளில் காரைக்கால் நகரப் பகுதிய... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபு புதன்கிழமை ஆய்வு செய்தாா். கல்லூரிக்கு வந்த அவா், பல்வேறு இடங்களை... மேலும் பார்க்க

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால்: சமுதாய நலப்பணித் திட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

காரைக்காலில் இரு மண்டலங்களுக்கு புதிய எஸ்.பி.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட 2 மண்டலங்களில் புதிய எஸ்.பி.க்களை புதுவை உள்துறை நியமித்துள்ளது. காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதுச்சேரி மேற்... மேலும் பார்க்க

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

காரைக்கால்: உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி காரைக்காலில் கொசு உற்பத்தியாகக்கூடிய பொருட்களை கண்டறிந்து அழிக்கும் பணியை நலவழித்துறையினா் மேற்கொண்டனா்.காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்கும... மேலும் பார்க்க