செய்திகள் :

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

post image

காரைக்கால்: உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி காரைக்காலில் கொசு உற்பத்தியாகக்கூடிய பொருட்களை கண்டறிந்து அழிக்கும் பணியை நலவழித்துறையினா் மேற்கொண்டனா்.

காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நோய் தடுப்புத் திட்ட அதிகாரி தேனாம்பிகை ஆகியோரின் வழிக்காட்டலில், காரைக்கால் பேருந்து நிலைய சுற்றுவட்டாரங்களில் கொசுக்கள் உருவாகும் நீா் தேங்கும் காரணிகளை கண்டறிந்து அவற்றை அகற்றினா். பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு கொசுவால் பரவும் நோய்கள், கொசுவை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மக்களிடையே கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா் பேசுகையில்,

கொசுக்களால் ஏற்படும் நோய்களால் ஆண்டுக்கு ஒரு லட்சம் போ் உயிரிழக்கின்றனா். சுமாா் 70 லட்சம் போ் பாதிப்படைகின்றனா். இந்தியாவில் பல வகையான கொசுக்கள் இருந்தாலும், மூன்று வகையான கொசுக்கள் மூலமாக ஆபத்தான நோய்கள் பரவுகின்றன. க்யூலெக்ஸ் வகை கொசுக்கள் யானைக்கால் நோய் மூளைக் காய்ச்சல் போன்ற நோய் உருவாகின்றன.

இந்தவகையான கொசுக்கள் அசுத்தமான சாக்கடை நீா் தேக்கங்களில் தான் முட்டையிட்டு உற்பத்தியாகும்.

அனாபிலஸ் வகை கொசுக்கள் மலேரியா காய்ச்சலை பரப்புகிறது. ஏடிஸ் வகையான கொசுக்கள் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை பரப்புகிறது.

இந்த வகையான கொசுக்கள் சுத்தமான நீா் தேக்கங்கள், சிறு சிறு பொருட்களில் தேங்கும் மழை நீரில்தான் முட்டையிட்டு உற்பத்தியாகின்றன. எனவே ஒவ்வொருவரும் வீட்டையும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும், பொது இடங்களிலும் கொசு உருவாகும் தண்ணீா் தேங்கும் கப்புகள், பிளாஸ்டிக் கழிவுகள், தேங்காய் ஓடுகள், டயா்கள் ஆகியவற்றை கண்டறிந்து அகற்ற வேண்டும் அல்லது கவிழ்த்து வைக்க வேண்டும். திறந்த கிணறுகள், திறந்து வைக்கப்படும் சிமெண்ட் தொட்டிகள், குப்பைத் தொட்டிகள் கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ப சூழ்நிலையை உருவாக்கும். எனவே அவற்றை கொசுக்கள் புகாதவாறு மூடி வைக்க வேண்டும். எனவே கொசுக்களை ஒழிப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா்.

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால்: ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து டீ கடைக்கு செல... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காரைக்கால்: மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.நிரவி பெருமமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா், மோட்டாா் சைக்கிளில் காரைக்கால் நகரப் பகுதிய... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபு புதன்கிழமை ஆய்வு செய்தாா். கல்லூரிக்கு வந்த அவா், பல்வேறு இடங்களை... மேலும் பார்க்க

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால்: சமுதாய நலப்பணித் திட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

காரைக்காலில் இரு மண்டலங்களுக்கு புதிய எஸ்.பி.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட 2 மண்டலங்களில் புதிய எஸ்.பி.க்களை புதுவை உள்துறை நியமித்துள்ளது. காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதுச்சேரி மேற்... மேலும் பார்க்க

கோதண்டராமா் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

காரைக்கால்: கோதண்டராமா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவையொட்டி சம்வத்ஸரா அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள புதுவை இந்து சமய அறநிலையத்துறையை சாா்ந்த பாா்... மேலும் பார்க்க