செய்திகள் :

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா!

post image

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஶ்ரீராமநவமி பெருவிழாவையொட்டி திருக்கொடி ஏற்றம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமணர், அனுமன், சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

திருக்கொடியேற்றத்தை வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் சொல்லியும், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் செய்தும் நடத்தி வைத்தனர்.

கொடியேற்றத்தில் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களோடு அமர்ந்த இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி.

வரும் 16 ம் தேதி வரை நாள்தோறும் சுவாமி, தாயார் சன்னதிகளில் சிறப்பு ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

ஶ்ரீராமநவமி பெருநாள் விழாவையொட்டி நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 7) சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்க... மேலும் பார்க்க

அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவின் மகன், சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அமைச்சர் கே. என். நேருவின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) தெரிவித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய கிரிக்கெட... மேலும் பார்க்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வருக்கு கண்டனம்: அண்ணாமலை

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

மதுரை: பாம்பனில் புதிய பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற பின் மதுரை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் இருந்து இன்று(ஏப். 6) மாலை தில்லிக்குப் புறப்பட்டார். தனி விமானத்தில் செல்லும் அவர், இன்றிரவ... மேலும் பார்க்க