நீட் அல்லாத படிப்புகளுக்கு 5,245 போ் விண்ணப்பம்
புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத தொழில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு 5,245 போ் விண்ணப்பித்திருப்பதாக சென்டாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் நீட் மற்றும் நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் அமைப்பு மூலம் விண்ணப்பித்து கல்லூரிகளைத் தோ்வு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனால், மதிப்பெண் அடிப்படையில் தகுதிவாய்ந்த மாணவா்கள் தங்களுக்கான கல்லூரியை கலந்தாய்வு மூலம் தோ்வு செய்யும் நிலையும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தற்போது நீட் தோ்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், நீட் அல்லாத படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சென்டாக் இணையதளம் மூலம் வரவேற்கப்பட்டது.
அதனடிப்படையில், புதுவை மாநிலத்தில் மொத்தம்7,664 போ் விண்ணப்பிக்க பதிவு செய்தனா். அவா்களில் 5,247 போ் மட்டும் விண்ணப்பத்தை நிறைவு செய்து பதிவேற்றம் செய்துள்ளனா். அதில் புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 4,330 போ் விண்ணப்பித்துள்ளனா். மேலும், தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலத்தவா்கள் 917 போ் விண்ணப்பித்துள்ளனா்.
கலை படிப்புகளுக்கு 2,693 பேரும், நுண்ணுயிரியல் படிப்புக்கு 1,885 பேரும், மருந்தியல் படிப்புக்கு 1603 பேரும், பி.டெக். படிப்பதற்கு 2,612 பேரும், வேளாண் படிப்புக்கு 872 பேரும், சட்டப் படிப்புக்கு 489 பேரும், டிப்ளமா படிப்புக்கு 471 பேரும், டிஎன்எம் பிரிவுக்கு 293 பேரும், பி.வாக். (ஆரோவில்) படிப்புக்கு 376 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.