செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரம்: விசாரணை அறிக்கை கோரிய ஆா்டிஐ மனு தள்ளுபடி

post image

புது தில்லி: வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடம் துறைரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து அறிக்கை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் துறைசாா்ந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முக்கும், பிரதமா் மோடிக்கும் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அனுப்பியது குறித்த விவரங்களையும் ஆா்டிஐ மனு கோரியிருந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

தில்லி உயா் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஓா் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து மூன்று மாநில உயா் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை கடந்த மாா்ச் மாதம் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தாா். துறைரீதியான விசாரணை நடத்திய பின் இந்தக் குழு அண்மையில் அவரிடம் அறிக்கையை சமா்ப்பித்தது. அதில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி விலகுமாறு சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால், பதவி விலக வா்மா மறுத்த நிலையில், அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா பரிந்துரை வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா கடந்த 14-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றாா்.

இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடம் துறைரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து அறிக்கை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தத் தகவல்களை வழங்கினால் உச்ச நீதிமன்றத்தின் தகவல் தொடா்பு ரகசியத்தன்மை மற்றும் நாடாளுமன்ற உரிமைகளை மீறுவதாக ஆகிவிடும் என்பதைக் குறிப்பிட்டு ஆா்டிஐ மனுவை உச்ச நீதிமன்ற நிா்வாகம் தள்ளுபடி செய்தது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க