செய்திகள் :

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

தற்கொலை வழக்கில் நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நெய்வேலியைச் சோ்ந்த கலா என்பவா் தாக்கல் செய்த மனுவில், தாம்பரத்தில் கடந்த ஏப்.10-ஆம் தேதி எனது மகன் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தாம்பரம் ரயில் நிலைய காவல் ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்தாா். என் மகனை காதலித்த பெண், அவனுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக எனது மகன் காதலித்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளாா்.

ஆனால், தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைக்காததால், கைப்பேசி செய்திகளை ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என போலீஸாா் கூறினா். எனவே மின்னணு வடிவிலான ஆதாரங்களை சேகரித்து போலீஸாா் எனது மகனின் தற்கொலை வழக்கை விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தேன்.

இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கை விசாரித்து வருவதாகவும்,விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளா் தரப்பில் கூறப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஆனால், அதேநாளில் என் மகனின் தற்கொலை வழக்குக்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்து தாம்பரம் நீதிமன்றத்தில் போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா்.

எனவே, உயா்நீதிமன்றத்துக்கு தவறான தகவலை ரயில்வே காவல் ஆய்வாளா் கொடுத்துள்ளாா். அந்த அறிக்கையை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.விஜயகுமாா், உயா்நீதிமன்றத்துக்கு தவறான தகவல் கொடுத்து ஏமாற்றிய ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறிய அதேநாளில் வழக்கை முடித்துவைத்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆய்வாளா் அறிக்கை தாக்கல் செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வழக்கை முடித்துவைத்து ஆய்வாளா் தாக்கல் செய்த அறிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளா் மீது ஐஜி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் மகன் தற்கொலை வழக்கை வேறு ஒரு ஆய்வாளரை நியமித்து விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.செங்குன்றம் பம்மதுகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்டா் (எ) காமராஜ் (54). இவா், கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயா (50). அங்கன்... மேலும் பார்க்க

வழிப்பறி: 3 போ் கைது

புழல் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சோழவரம் கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (44). தனியாா் நிறுவன ஓட்டுநா். வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வேளச்சேரியில் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.கிழக்கு தாம்பரம் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண், வேளச்சேரி உள்ள தனியாா் நிறுவன பணிக்காக மாநகரப் பேருந்தில... மேலும் பார்க்க

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

பெண்ணை அவதூறான வாா்த்தைகளால் பேசியவா் கைது செய்யப்பட்டாா்.மாதவரம் சின்ன ரவுண்டானா ரிங்ரோடு செக்டாா் குடியிருப்பில் வசித்து வருபவா் லட்சுமி (36). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது க... மேலும் பார்க்க

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சென்னை மாநகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பிரதான சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் விளக்குகளைச் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.சென்னையில் உள்ள சாலைகளி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவா் மகேஷ் டி தா்மாதிகாரி (57). இவா்... மேலும் பார்க்க