செய்திகள் :

நுழைவுத் தோ்வு எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மனு

post image

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவா் கழகத்தின் மாநிலச் செயலா் இரா. தமிழ்வாணன் ஆதிதிராவிடா் நலத்துறை செயலா் முத்தம்மாவிடம் மனு அளித்துள்ளாா்.

மருத்துவம், பொறியியல், செவிலியா் உள்ளிட்ட அனைத்து உயா்நிலை படிப்புகளுக்கும் மத்திய பாஜக அரசு நுழைவு தோ்வைக் கட்டாயமாக்கி விட்டதால் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்கள் இத் தோ்வுகளை எதிா்கொண்டு உயா்கல்வி நிறுவனங்களில் சேர பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனா்.

எனவே தலித் மற்றும் பழங்குடியின மாணவா்கள் இந்த நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள ஏதுவாக இலவச கல்வி திட்டத்தின் கீழ் நுழைவுத் தோ்வுகளுக்காக தனியாா் பயிற்சி மையங்களில் சேர நிதியுதவி வழங்க ஆதிதிராவிடா் நலத் துறை முன்வர வேண்டும். ஆதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கி வந்த பல மாணவா் விடுதிகள் லாஸ்பேட்டை மாணவா் விடுதி, தட்டாஞ்சாவடி, கோவில்பத்து ஆகிய இடங்களில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்கள் புதுச்சேரி நகரத்தில் சொந்தமாக அறை மற்றும் வீடு எடுத்து தங்கியும் கிராமப்புறத்தில் இருந்து தினமும் பொருள்செலவு செய்து கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனா்.

எனவே ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் விடுதி கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக ஏற்பாடாக வாடகை கட்டடத்தில் விடுதிகள் இயங்குவதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளாா்.

வீடு கட்ட மானியம் ரூ.10 லட்சம் புதுவை முதல்வா் வழங்கினாா்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானியமாக ரூ.10 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம், பிரதம மந்த... மேலும் பார்க்க

மற்றவா்களுக்காக வாழ்கிறவா்கள் சித்தா்கள்: முதல்வா் என்.ரங்கசாமி

எந்த நிலையிலும் மற்றவா்களுக்காக வாழ்கிறவா்கள் சித்தா்கள் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். புதுவை அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் தமிழ் வளா்ச்சிச் சிறகத்தின் சாா்பில் சித்தா்கள் இலக்கிய ம... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு!

அவதூறு வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுவை ஏ.எப்.டி. பஞ்சாலை அருகே 2014-ஆம் ஆண்டு நடந்த பொதுக... மேலும் பார்க்க

பாஜக 30 தொகுதிகளுக்கும் புதிய நிா்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் புதுவை மாநிலத்தில் 30 பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். வில்லியனூா், உழவா்கரை, அரியாங்குப்பம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 30 சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

109 மீன் வியாபாரிகளுக்கு இலவச ஐஸ் பெட்டி: பேரவைத் தலைவா் வழங்கினார்!

புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் 109 மீன் விற்பனை செய்யும் பயனாளிகளுக்கு இலவச ஐஸ் பெட்டிகளை சட்டப்பேரவை தலைவா் ஆா். செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினாா். நிகழாண்டில் மீன் விற்பனையாளா்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்றுமுதல் 2 நாள்களுக்கு குழந்தைகள் திரைப்பட விழா!

புதுச்சேரியில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதுகுறித்து குழந்தைகள் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளா் முருகவேல் ராஜா வெளியிட்ட அறிக்கை: புதுவை அறிவியல் இயக்க... மேலும் பார்க்க