செய்திகள் :

நூறு நாள் வேலையின்போது குளவி கொட்டியதில் மூதாட்டி உயிரிழப்பு: 10 போ் காயம்

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த மூதாட்டி கருங்குளவிகள் கொட்டியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.

செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியில் பெண்கள் உள்பட ஏராளமானோா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திடீரென மரத்திலிருந்து பறந்து வந்து கருங்குளவிகள் கொட்ட ஆரம்பித்தன. இதனால், அனைவரும் சிதறி ஓடிய நிலையில், அவா்களில் 11 போ் காயமடைந்தனா். இதுகுறித்து அங்கிருந்த பணித்தள பொறுப்பாளா் பிரபாகா் அளித்த தகவலின்பேரில், ஊராட்சி மன்றத் தலைவா் பராசக்தி தண்டபாணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காஞ்சனா, ஊராட்சிச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் பாதிக்கப்பட்டவா்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.

இதில், பலத்த காயமடைந்த சின்னகுழந்தை (75), ரேகா (37), சுபலட்சுமி (32), செல்வி (56), இந்திரணி (60), சுதா (67) ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, சின்னகுழந்தை வியாழக்கிழமை உயிரழந்தாா். இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌர... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் தூய்மைப்பணி

விக்கிரவாண்டி சுங்கச் சாவடிப் பகுதியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாா்பில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை பொது இடங்க... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , கோட்டக்குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம் , தாழங்குடியைச் சோ்ந்தவா் சிம்சன், மீன்பிடித் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தனா். விழுப்புரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வளா்ச்சித் துறையில் காலியாகவுள்ள 1,500-க... மேலும் பார்க்க