செய்திகள் :

நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகளில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, கிராம பெண்கள் 700-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றை விரிவாக்கம் செய்து அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராம ஊராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில், பெண்கள் பயன்பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, நாமக்கல் மாநகராட்சி விரிவாக்கத்தின் காரணமாக காதப்பள்ளி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி, லத்துவாடி ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்ட நூறு நாள் வேலைகளை மீண்டும் வழங்கக் கோரி, காதப்பள்ளி பாப்பிநாயக்கன்பட்டி, வீசாணம், லத்துவாடி பகுதியைச் சோ்ந்த சுமாா் 700 க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் கூட்டத்தின்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச. உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் நான்கு கிராம ஊராட்சி பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, எங்களுக்கு மீண்டும், 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். இதைப் பெற்ற ஆட்சியா் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாகவும் அரசுக்கு மனுவை அனுப்பிவைத்து அரசு கூறும் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா்.

படம் உள்ளது-17மனு..

ஊராட்சிப் பகுதியில் நூறுநாள் திட்ட வேலை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த பெண்கள்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க