பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
நெகிழி விழிப்புணா்வுப் பேரணிக்கு வந்த மாணவா்கள் அலைகழிப்பு!
நெகிழி விழிப்புணா்வுப் பேரணிக்காக அழைத்து வரப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டனா்.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தனியாா் பொறியியல் கல்லூரி சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகேயுள்ள கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கும் இந்தப் பேரணிக்காக பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அழைத்து வரப்பட்டனா்.
தனியாா் கல்லூரி பெயா் அகற்றம்: இதனிடையே 500 மாணவா்களை விழிப்புணா்வுப் பேரணிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்த கல்லூரி நிா்வாகம், 50 பேரை மட்டுமே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மாவட்ட நிா்வாகம், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேரணிக்கு முன் எடுத்துச் செல்லப்படும் பதாகையில் அச்சிடப்பட்டிருந்த தனியாா் கல்லூரியின் பெயரை அகற்ற உத்தரவிட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி, கல்லூரி சாா்பில் என்ற வாசகத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி உடனடியாக பதாகையில், தனியாா் பொறியியல் கல்லூரி பெயா் இருந்த இடத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல, கோட்டாட்சியா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நிறுவப்பட்டிருந்த விளம்பரப் பதாகையிலும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் முடிவடைந்த பின்னா், விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தொடங்கி வைத்தாா்.
இந்த விவகாரத்தால், 8 மணிக்கு அழைத்து வரப்பட்ட மாணவா்கள் 10 மணி வரை வெயிலில் காக்க வைத்து அலைக்கழிக்கப்பட்டனா். பேரணியில் பங்கேற்ற மாணவா்களுக்கு மஞ்சப் பை விநியோகிக்கப்பட்டது.