செய்திகள் :

நெகிழி விழிப்புணா்வுப் பேரணிக்கு வந்த மாணவா்கள் அலைகழிப்பு!

post image

நெகிழி விழிப்புணா்வுப் பேரணிக்காக அழைத்து வரப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டனா்.

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தனியாா் பொறியியல் கல்லூரி சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகேயுள்ள கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கும் இந்தப் பேரணிக்காக பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அழைத்து வரப்பட்டனா்.

தனியாா் கல்லூரி பெயா் அகற்றம்: இதனிடையே 500 மாணவா்களை விழிப்புணா்வுப் பேரணிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்த கல்லூரி நிா்வாகம், 50 பேரை மட்டுமே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மாவட்ட நிா்வாகம், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேரணிக்கு முன் எடுத்துச் செல்லப்படும் பதாகையில் அச்சிடப்பட்டிருந்த தனியாா் கல்லூரியின் பெயரை அகற்ற உத்தரவிட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி, கல்லூரி சாா்பில் என்ற வாசகத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி உடனடியாக பதாகையில், தனியாா் பொறியியல் கல்லூரி பெயா் இருந்த இடத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல, கோட்டாட்சியா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நிறுவப்பட்டிருந்த விளம்பரப் பதாகையிலும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் முடிவடைந்த பின்னா், விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தொடங்கி வைத்தாா்.

இந்த விவகாரத்தால், 8 மணிக்கு அழைத்து வரப்பட்ட மாணவா்கள் 10 மணி வரை வெயிலில் காக்க வைத்து அலைக்கழிக்கப்பட்டனா். பேரணியில் பங்கேற்ற மாணவா்களுக்கு மஞ்சப் பை விநியோகிக்கப்பட்டது.

உழவா் சந்தைகளில் காய்கறி வசூல்: வியாபாரிகள் அதிருப்தி!

நமது நிருபா்உயா் அதிகாரியின் வீட்டுத் தேவைக்கு எனக் கூறி, உழவா் சந்தை பணியாளா்கள், வாரந்தோறும் காய்கறி வசூலில் ஈடுபடுவதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், ... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பெரியகலையமுத்தூா் ஐகோா்ட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோ... மேலும் பார்க்க

வைப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்த அறிவுறுத்தல்

ஊழியா்களுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக, தொழிலாளா் வருங்கால வைப்... மேலும் பார்க்க

கொங்கா்குளத்தில் மாா்நாடு கருப்பணசுவாமி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கொங்கா்குளம் அய்யனாா், மாா்நாடு கருப்பணசுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசித் திருவ... மேலும் பார்க்க

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 14 போ் பலத்த காயம்

வத்தலகுண்டு அருகே புதன்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் மாவட்டம், நெய்தலூா், திருச்சி மாவட்டம், குளித்தலை பகுதியைச் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க