சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு...
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடையை வருவாய், நெடுஞ்சாலை துறையினா் அகற்றினா்.
திருத்தணி நகராட்சி, ம.பொ.சி.சாலையில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனிநபா் ஒருவா் பூக்கடை கட்டி வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த மாதம் ம.பொ.சி.சாலையில் மழைநீா் வடிகால்வாயை நெடுஞ்சாலை துறையினா் கட்டியபோது, பூக் கடை அருகே கால்வாய் கட்டுவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்ததால், பணிகளை நிறுத்தினா்.
இதையடுத்து, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவின் பேரில் வட்டாட்சியா் மலா்விழி, போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மழைநீா் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, புதிதாக கால்வாய் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. தொடா்ந்து கால்வாய் ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டு, கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கின.