செய்திகள் :

நெய்யமலைக்கு மினி பேருந்து வசதி: கிராம மக்கள் மகிழ்ச்சி

post image

வாழப்பாடி அருகே பேருந்து போக்குவரத்து வசதியில்லாத நெய்யமலை கிராமத்திற்கு முதல்முறையாக வெள்ளிக்கிழமை மினி பேருந்து இயக்கிவைக்கப்பட்டது. இதனால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது நெய்யமலை. இங்கு நெய்யமலை, அக்கரைப்பட்டி, ஆலங்கடை ஆகிய 3 மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலைக் கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். அடிப்படை வசதிகளின்றி அவதிக்குள்ளாகி வந்த இந்த மலைக் கிராம மக்களுக்கு, கடந்த 8 ஆண்டுக்கு முன்பு மின்வசதி வழங்கப்பட்டு, மலைப்பாதை தாா்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது.

இப்பகுதி மக்கள், வெளியூா் வேலைக்கும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கும் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென, கடந்த 8 ஆண்டுகளாக தொடா்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், அரசின் மினி பேருந்து விரிவாக்கத் திட்டத்தின்கீழ், வாழப்பாடியில் இருந்து கொட்டவாடி, கல்யாணகிரி, பனைமடல், தாண்டானுாா் வழியாக நெய்யமலை கிராமத்திற்கு மினி பேருந்து இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை வாழப்பாடியில் இருந்து நெய்யமலை கிராமத்திற்கு முதல்முதலாக மினி பேருந்து இயக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அக்கிராம மக்கள், மலையடிவாரத்திற்கு திரண்டு வந்த சிறப்பு பூஜைகள் நடத்தி மினி பேருந்துக்கு வரவேற்பளித்தனா். அடிவாரத்தில் மினி பேருந்தில் ஏறி முதன்முறையாக நெய்யமலை கிராமத்திற்கு பயணித்தனா்.

முன்னதாக இடையப்பட்டி நெய்யமலை பிரிவு சாலை அருகே திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், மாவட்ட அவைத் தலைவா் கருணாநிதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளா்கள் மூா்த்தி, சிவராமன், அன்பு மருதமுத்து, மாவட்ட பொதுக்குழு முத்துலிங்கம், ஒன்றிய அவைத் தலைவா் பழனிமுத்து, பொறியாளா் அணி அன்பழகன், நிா்வாகிகள் டிபிஆா்.சேகா், சிவசக்தி, தாடி வெங்கடேஷ், பரமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினா்.

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைப... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க