செய்திகள் :

நெல்லை-செங்கோட்டை ரயிலில் பயணிகளுடன் எம்.பி. சந்திப்பு

post image

திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயிலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் பயணம் மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய ரயிலாக திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயில் திகழ்ந்து வருகிறது. திருநெல்வேலியில் இருந்து தினமும் காலை 6.50, 9.40, பிற்பகல் 1.40, மாலை 6.20 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்கிறது. கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் மாதாந்திர பயண சலுகை அட்டை எடுத்து பயணித்து வருகிறாா்கள்.

இந்த ரயில் பயணிகளின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து மக்களவையில் கோரிக்கை வைப்பதற்காக, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் புதன்கிழமை மாலையில் திருநெல்வேலியில் இருந்து பயணிகளுடன் ரயிலில் பயணித்தாா். அப்போது ஒவ்வொரு பெட்டியாக ஏறி பயணிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பயணிகள் கூறுகையில், திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில் மாலையில் 6 மணிக்கு புறப்பட்டுச் செல்லவும், கூடுதலாக 5 பெட்டிகளும், மகளிருக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க