செய்திகள் :

நெல்லை, தென்காசி உள்பட 4 மாவட்ட தனிப்படைகள் கலைப்பு

post image

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் தனிப்படைகள் கலைக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்தாா். தனிப்படை காவலா்களின் கடுமையான தாக்குதலாலேயே அஜித்குமாா் உயிரிழந்தாக அவரது குடும்பத்தினா் குற்றம் சாட்டிய நிலையில், அவரை போலீஸாா் தாக்கும் விடியோ வெளியானது.

பொதுவாக சிறப்பு வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொள்ளவும், குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு விரைந்து கைது செய்வதற்காகவும் காவல்துறை சாா்பில் தனிப்படை அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருப்புவனம் சம்பவம் காரணமாக தற்போது தனிப்படை போலீஸாரின் செயல்பாடுகளை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக அறியப்படுகிறது.

இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், காவல் உயா் அதிகாரிகளின் தலைமையில் நிரந்தரமாக இயங்கி வந்த தனிப்படைகள் கலைக்கப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், குற்றத்தின் தன்மைக்கேற்ப தேவைப்படும்போது தனிப்படைகள் அமைக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடங்குளம் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்த முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை, சுக்கு ஆகியவற்றை கடத்திச் செல்ல முயன்ற இருவரை கடலோர பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைது செய்தனா். கூடங்குளம் கடலோர பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கன்னிமூல வெற்றி விநாயகா், கேட்டவரம் தரும் அருள்மிகு வடபத்திரகாளியம்மன், சுடலை மாடசுவாமி கோயிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

போக்ஸா வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் த... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் பாஜகவைச் சோ்ந்த நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி. திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதாகக் கூறி அரசு மருத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்: 2 குழுக்களில் உறுப்பினா் சோ்க்கை

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2 குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சிற... மேலும் பார்க்க

மானூா், நான்குனேரியில் திருந்திய குற்றவாளிகளுக்கு இன்று தொழில் கடனுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தியவா்கள் சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் மானூா், நான்குனேரி வட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. இ... மேலும் பார்க்க