செய்திகள் :

நேபாள பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்

post image

நேபாளத்துக்குப் பயணிப்பதை இந்தியா்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

நேபாளத்தில் இளைஞா்கள் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்குப் பயணிப்பதை இந்தியா்கள் ஒத்திவைக்க வேண்டும். அந்நாட்டில் நிலைமை சரியாகும் வரை, அங்கு செல்ல வேண்டாம்.

தற்போது நேபாளத்தில் உள்ள இந்தியா்கள் வசிப்பிடத்தில் இருந்து வெளியேற வேண்டாம். நேபாள அதிகாரிகள், அந்நாட்டுத் தலைநகா் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

ஏதேனும் உதவி தேவைப்பட்டால் +977-9808602881, +977-9810326134 ஆகிய எண்களில் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடா்புகொள்ளலாம். இரு எண்களை வாட்ஸ்-அப்பிலும் அழைக்கலாம்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சூழலை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. நேபாளத்தின் நெருங்கிய நட்பு மற்றும் அண்டை நாடு என்ற முறையில், நேபாளிகள் அனைவரும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு அமைதியான வழியில் பேச்சுவாா்த்தை மூலம், பிரச்னைகளுக்கு தீா்வு காண்பா் என இந்தியா நம்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

ஏா் இந்தியா விமானங்கள் ரத்து

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் காரணமாக தில்லியிலிருந்து காத்மாண்டு செல்ல வேண்டிய 4 ஏா் இந்தியா விமானங்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சா்வதேச விமான நிலையம் மூடப்பட்டதால், அங்கு தில்லியில் இருந்து செல்ல வேண்டிய இண்டிகோ, நேபாள் ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

குஜராத் முதல்வருடன் இஸ்ரேல் நிதியமைச்சர் சந்திப்பு!

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இஸ்ரேல் அரசின் வலது சாரி நிதியமைச்சர் பெசால... மேலும் பார்க்க

’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!

உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்து அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் போராட்டம் நடத்தினார்.காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

நேபாளத்தில் வன்முறை: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

நேபாளத்தில் வெடித்துள்ள கலவரத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைநகரான காத்மாண்டு இடையிலான அனைத்து ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.நேபாள அரசுக்கு எதிராக, ஜென்-ஸி என அழைக்கப்படும் ... மேலும் பார்க்க

மோடியைப் போன்ற தலைவர் வேண்டும்: நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக

நேபாளத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் இளைஞர்கள், மோடியைப் போன்ற தலைவர் வேண்டும் என்று கூறும் விடியோவை பாஜக பகிர்ந்துள்ளது. மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனும் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

நடிகை ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி நாளை உத்தரகண்ட் செல்கிறார்!

மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட நாளை(செப். 11) உத்தரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம்... மேலும் பார்க்க