செய்திகள் :

நேபாள மாணவி மரணம்: உண்மை கண்டறியும் குழு அமைத்தது அரசு!

post image

ஒடிசா கல்லூரியில் நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த உண்மை கண்டறியும் உயர்நிலைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

மேலும், நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தடியடி நடத்தி விரட்டியதாக ஒடிசா கல்லூரியின் ஊழியர்கள் 3 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புவனேஸ்வர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்த நேபாளத்தைச் சேர்ந்த ப்ரகிரீத்தி லாம்சல் என்ற மாணவி, கடந்த பிப். 16 ஆம் தேதி மாலை அவரது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தக்கோரி அக்கல்லூரியில் பயிலும் 500க்கும் அதிகமான நேபாள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து மாணவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த விவகாரம் நேபாள அரசு கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசு சார்பில் இரு அதிகாரிகள் ஒடிசா கல்லூரிக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனிடையே மாணவர்கள் மீது தடியடி நடத்தி வெளியேற்றிய மற்றும் கட்டாயப்படுத்தி விடுதியில் இருந்து அப்புறப்படுத்திய கல்லூரிக் காவலர்கள் இருவரை நிர்வாகம் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது. இதோடு மட்டுமின்றி கல்லூரியில் பணிபுரிந்துவந்த 3 ஊழியர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே கல்லூரி நிர்வாகம், மாணவர்களிடம் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதிலுமிருந்துவரும் மாணவர்களுக்கு கலாசார உள்ளடக்கம், மரியாதை மற்றும் அக்கறை என வீடு போன்ற உணர்வைக் கொடுக்கவே கல்லூரி நிர்வாகம் முயற்சிக்கிறது. சமீபத்தில் நடந்த சம்பவத்துக்கு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

நேபாள மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு, கண்ணியம், ஒழுக்கம் ஆகியவற்றை பாதுகாப்போம் என்ற மீண்டும் உறுதி கூறுகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க