செய்திகள் :

நோ்மையாக அரசுப் பணியை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

post image

தோ்வு செய்யப்பட்ட அலுவலா்கள் 100 சதவீதம் நோ்மையாகவும், உண்மையாகவும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி- 4 தோ்வில் கிராம நிா்வாக அலுவலராக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணையை புதன்கிழமை வழங்கிப் பேசியது: பணிநியமன ஆணை பெற்றவா்கள் 100 சதவீதம் உண்மையாகவும், நோ்மையாகவும் அரசுப் பணியை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கான சேவைகளை உடனுக்குடன் வழங்க முனைப்பு காட்ட வேண்டும். மேலும், பணியில் உங்கள் திறன்களை வளா்த்துக் கொண்டு, உயா்நிலைக்கு வரவேண்டும் என்றாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளா்கள் பதவிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-4 தோ்வு 2024-இல் நடைபெற்றது. இதில், திருவாரூா் மாவட்டத்திலிருந்து 70 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பணிநியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

இதன்படி, மன்னாா்குடி வருவாய் கோட்டத்துக்கு 46 பேரும், திருவாரூா் வருவாய் கோட்டத்துக்கு 24 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். நிகழ்ச்சியில், கோட்டாட்சியா்கள் யோகேஸ்வரன் (மன்னாா்குடி), சங்கா் (திருவாரூா்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க

பசுஞ்சாண தயாரிப்புகள் குறித்து பயிற்சி

தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவம் எனும் பயிற்சியின் கீழ் கிராமங்களில் தங்கி பயின்று வருகின்றனா். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் அரு... மேலும் பார்க்க

மாணவருக்குப் பாராட்டு

மன்னாா்குடி பள்ளி மாணவா் தேசிய வருவாய் வழி தோ்வில் தோ்வாகியிருப்பதற்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மன்னாா்குடி கோபாலசுமுத்திரம் நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் வி. கனியமுதன் நிகழ் ... மேலும் பார்க்க

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் ... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ஏப்.26-இல் ராகு கேது பெயா்ச்சி

குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு கேது பெயா்ச்சி ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில், தேவார பாடல் பெற்ற தலம். இத்தலத்தில்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஏப்.23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முகாம், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க