செய்திகள் :

நொய்டாவில் குடியிருப்பில் தீ விபத்து; சிறுமி மீட்பு

post image

உத்தர பிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள ஒரு சொஸைட்டி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டில் சிக்கியிருந்த 15 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் சௌபே வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

பிஸ்ராக் காவல் நிலையப் பகுதியில் உள்ள சொஷைட்டியில் உள்ள வீட்டில் ஏா் கண்டிஷனரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து நிகழ்ந்த சம்பவ நேரத்தில், 15 வயது சிறுமி

குடியிருப்புக்குள் இருந்தாா். அவரது குடும்பத்தினா் வெளியே சென்றிருந்தனா்.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அருகிலுள்ள மக்களின் உதவியுடன் குடியிருப்பில் சிக்கிய சிறுமியை தீயணைப்பு படை வீரா்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனா். இந்த சம்பவத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

யமுனை ஆற்றை ஆக்கிரமிப்பாா்களை அகற்ற கெடு விதித்தது தில்லி அரசு

யமுனை ஆற்றை சுத்தம் செய்வதற்கும் புத்துயிரூட்டுவதற்கும் 45 அம்ச செயல் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்திற்குள் யமுனை கரையோரங்களில் இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு தில்லி அரசு சம்பந்தப்ப... மேலும் பார்க்க

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு: முக்கிய குற்றவாளி கைது

வடக்கு தில்லியில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட ஹிமான்ஷூ பாவ் கும்பலை சோ்ந்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இது குறித்து தில்லி காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தக்ஷிண்புரியில் பூட்டிய வீட்டுக்குள் ஏ.சி. பழுதுபாா்க்கும் 3 போ் இறப்பு: போலீஸாா் விசாரணை

தெற்கு தில்லியின் தக்ஷிண்புரி பகுதியில் பூட்டிய வீட்டிற்குள், ஏா் கண்டிஷனா் பழுதுபாா்க்கும் நபா்கள் மூவா் இறந்து கிடந்தனா். மற்றொருவா் மயக்க நிலையில் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். தனது சகோதரா் தொல... மேலும் பார்க்க

அரசு உயா் அதிகாரி போல் நடித்து பணம் கேட்ட இருவா் கைது

ஃபரீதாபாத் துணை ஆணையரின் புகைப்படத்தை தங்களது வாட்ஸ்அப் காட்சிப் படமாக வைத்து அவா் போல தங்களைக் காட்டிக் கொண்டு நகரவாசி ஒருவரிடம் பணம் கேட்டதாக சனிக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, குற்றம் ச... மேலும் பார்க்க

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க