செய்திகள் :

பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: நயினாா் நாகேந்திரன், சீமான் நேரில் ஆதரவு

post image

பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் 10-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக் களத்துக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் நேரில் ஆதரவு தெரிவித்தனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையைச் சமாளிக்க 2012-ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சென்னையில் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 10-ஆவது நாளாக வியாழக்கிழமை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்து திருவல்லிகேணியில் உள்ள சமூகநலக்கூடத்தில் அடைத்து வைத்தனா்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் சமூக கூடத்துக்கு நேரில் சென்றனா். ஆனால், அவா்களுக்கு போலீஸாா் அனுமதி வழங்கவில்லை.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் சீமான் கூறுகையில், ‘வீடு தேடி சேவை என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், மக்கள் சாலைக்கு வந்து போராடும் நிலையே உள்ளது. பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக திமுக உறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.

நயினாா் நாகேந்திரன்: பகுதிநேர ஆசிரியா்களைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. பகுதிநேர ஆசிரியா்களுக்கு பாஜக துணைநிற்கும்.

இதேபோல் பகுதிநேர ஆசிரியா்கள் கைது நடவடிக்கைக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க