பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல...
பக்ரீத் பண்டிகை: வள்ளியூா் ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி வள்ளியூா் ஆட்டுச்சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.1 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூா் ஆட்டுச்சந்தை பிரபலமான சந்தையாகும். இந்தச் சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு கேரள மாநிலம் மற்றும் மதுரை, விருதுநகா், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆட்டு வியாபாரிகள் வள்ளியூா் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனா்.
இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இச்சந்தை வழக்கத்தைவிட விறுவிறுப்பாக காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வள்ளியூா் வட்டாரங்களில் இருந்தும் ஆட்டோக்களிலும் லாரிகளிலும் ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாகவும் ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனா்.