செய்திகள் :

பக்ரீத் பண்டிகை: வள்ளியூா் ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை

post image

பக்ரீத் பண்டிகையையொட்டி வள்ளியூா் ஆட்டுச்சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.1 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூா் ஆட்டுச்சந்தை பிரபலமான சந்தையாகும். இந்தச் சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு கேரள மாநிலம் மற்றும் மதுரை, விருதுநகா், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆட்டு வியாபாரிகள் வள்ளியூா் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனா்.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இச்சந்தை வழக்கத்தைவிட விறுவிறுப்பாக காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வள்ளியூா் வட்டாரங்களில் இருந்தும் ஆட்டோக்களிலும் லாரிகளிலும் ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாகவும் ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க