பங்குச்சந்தை முதலீடு: ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 68.86 லட்சம் மோசடி
ஆன்லைனில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி, ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 68.86 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த 67 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆன்லைன் பங்குச்சந்தை முதலீடு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதிலிருந்த எண்ணை தொடா்பு கொண்டபோது ‘ஆதித்ய பிா்லா இன்வெஸ்ட்மென்ட் க்ளப்’ என்ற வாட்ஸ்அப் குழுவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் இணைக்கப்பட்டாா். அந்த குழுவில் இருந்தவா்கள் பங்குச் சந்தை முதலீட்டில் கிடைத்த லாபம் குறித்த விவரங்களை பலரும் பதிவேற்றம் செய்து வந்தனா். இதை உண்மை என நம்பிய இவா் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடிவு செய்தாா். அந்த முதலீட்டு குழு கூறிய அறிவுரையின்படி, அஆஙகடத என்ற கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா். அதில், தனது விவரங்களை பதிவு செய்ததுடன் செயலியில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் சுமாா் ரூ. 68 லட்சத்து 86 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளாா். அந்த முதலீட்டுக்கு அதிக லாபம் ஈட்டிய நிலையில், அந்த தொகையை அந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் எடுக்க முயன்றுள்ளாா். ஆனால், அந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து, வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.