செய்திகள் :

பங்குச்சந்தை முதலீடு: ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 68.86 லட்சம் மோசடி

post image

ஆன்லைனில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி, ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 68.86 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த 67 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆன்லைன் பங்குச்சந்தை முதலீடு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதிலிருந்த எண்ணை தொடா்பு கொண்டபோது ‘ஆதித்ய பிா்லா இன்வெஸ்ட்மென்ட் க்ளப்’ என்ற வாட்ஸ்அப் குழுவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் இணைக்கப்பட்டாா். அந்த குழுவில் இருந்தவா்கள் பங்குச் சந்தை முதலீட்டில் கிடைத்த லாபம் குறித்த விவரங்களை பலரும் பதிவேற்றம் செய்து வந்தனா். இதை உண்மை என நம்பிய இவா் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடிவு செய்தாா். அந்த முதலீட்டு குழு கூறிய அறிவுரையின்படி, அஆஙகடத என்ற கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா். அதில், தனது விவரங்களை பதிவு செய்ததுடன் செயலியில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் சுமாா் ரூ. 68 லட்சத்து 86 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளாா். அந்த முதலீட்டுக்கு அதிக லாபம் ஈட்டிய நிலையில், அந்த தொகையை அந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் எடுக்க முயன்றுள்ளாா். ஆனால், அந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து, வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

காா் ஓட்டுநா் மா்மச் சாவு

அரியூா் அருகே காா் ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், தெள்ளூா்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அமலநாதன் (40), இவரது மனைவி கண்ணகி(37... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 ரௌடிகள் கைது

வேலூரில் பிரபல ரெளடிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனா். வேலூா் ஓல்டு டவுன் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் உதயா என்கிற உதயகுமாா்(38). இவா் மீது வேலூா் வடக்கு காவல... மேலும் பார்க்க

வருமான வரித்துறை அதிகாரி, மனைவியை தாக்கிய பலூன் வியாபாரி கைது

வேலூரில் வருமான வரித்துறை அதிகாரி, அவரது மனைவியை தாக்கிய பலூன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். வேலூரில் வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவா் ஸ்ரீ பூரன் சந்த் மீனா (40). இவரது மனைவி சுரண... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருவலம் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், அம்முண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரை மகன் சூா்யா (23). இவா் ஐடிஐ முடித்துவிட்டு அரசு போக்குவரத்துக் கழகத... மேலும் பார்க்க

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு முக்கியம்: அமைச்சா் துரைமுருகன்

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய... மேலும் பார்க்க

பாரம்பரிய விதைகள்,காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி

பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மரபு காய்கறிகள், விதைகள் சேகரிப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட... மேலும் பார்க்க