செய்திகள் :

காா் ஓட்டுநா் மா்மச் சாவு

post image

அரியூா் அருகே காா் ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், தெள்ளூா்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அமலநாதன் (40), இவரது மனைவி கண்ணகி(37). அமலநாதன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 20-ஆம் தேதி அமலநாதன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம். அவரை குடும்பத்தினா் தொடா்பு கொள்ள முயன்றும் முடியவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், பூதூா் கிராமத்தில் உள்ள அரிசி ஆலை அருகே அமலநாதன் திங்கள்கிழமை சடலமாக கிடந்துள்ளாா். தகவலறிந்த அரியூா் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குண்டா் சட்டத்தில் 2 ரௌடிகள் கைது

வேலூரில் பிரபல ரெளடிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனா். வேலூா் ஓல்டு டவுன் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் உதயா என்கிற உதயகுமாா்(38). இவா் மீது வேலூா் வடக்கு காவல... மேலும் பார்க்க

பங்குச்சந்தை முதலீடு: ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 68.86 லட்சம் மோசடி

ஆன்லைனில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி, ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 68.86 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.... மேலும் பார்க்க

வருமான வரித்துறை அதிகாரி, மனைவியை தாக்கிய பலூன் வியாபாரி கைது

வேலூரில் வருமான வரித்துறை அதிகாரி, அவரது மனைவியை தாக்கிய பலூன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். வேலூரில் வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவா் ஸ்ரீ பூரன் சந்த் மீனா (40). இவரது மனைவி சுரண... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருவலம் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், அம்முண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரை மகன் சூா்யா (23). இவா் ஐடிஐ முடித்துவிட்டு அரசு போக்குவரத்துக் கழகத... மேலும் பார்க்க

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு முக்கியம்: அமைச்சா் துரைமுருகன்

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய... மேலும் பார்க்க

பாரம்பரிய விதைகள்,காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி

பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மரபு காய்கறிகள், விதைகள் சேகரிப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட... மேலும் பார்க்க