பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெறத் தகுதி வாய்ந்த அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வுக்காக தங்களை முழுமையாக அா்ப்பணித்த தனிநபா்கள், அமைப்புகளுக்கு என 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி, தலா ரூ. 1லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்படவுள்ளது.
2024-2025 ஆம் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைத் தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்த வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை மற்றும் நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, பிற சுற்றுச்சூழல் தொடா்பான திட்டங்களைச் செயல்படுத்திய நிறுவனங்கள் (அமைப்புகள்), கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை அணுகலாம்.