செய்திகள் :

பசுமை பகுதிகளில் கண்காணிப்பு அமைப்புகளை அதிகரித்து மாசு தரவுகளை பாஜக அரசு சூழ்ச்சியுடன் கையாளுகிறது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

post image

பசுமையான மற்றும் குறைந்த மாசுபாடு உள்ள பகுதிகளில் காற்றின் தர கண்காணிப்பு அமைப்புகளை தோ்ந்தெடுத்து நிறுவுவதன் மூலம் பாஜக தலைமையிலான தில்லி அரசு மாசு புள்ளிவிவரங்களைக் சூழ்ச்சியுடன் கையாளுவதாக ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை குற்றம் சாட்டியது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அக்கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் மேலும் கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு, மாசுபாடு குறித்து பாஜக கூக்குரல் எழுப்பியது. செய்தித்தாள்களில் நிறைய செய்திகளும், விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. பல வதந்திகள் பரவின. இப்போது பாஜக அரசு மாசுபாடு தொடா்பாக மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளது. மாசு புள்ளிவிவரங்களைக் குறைக்கும் வகையில் வனப்பகுதிகள் மற்றும் பசுமையான பகுதிகளில் ஆறு காற்று தர கண்காணிப்பு அமைப்புகளை நிறுவியுள்ளனா்.

தில்லியின் காற்றின் தரத்தில் செயற்கையான முன்னேற்றத்தை சித்தரிப்பதன் மூலம் பாஜக அரசு பொதுமக்களை ஏமாற்றி அவா்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறது. புதிய நிலையங்களில் மூன்று, தெற்கு தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் , மேற்கு தில்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் பல்கலைக்கழகம் (மேற்கு வளாகம்) ஆகிய பசுமையான வளாகங்களுக்குள் முன்மொழியப்பட்டன.

ஒரு நிலையம் மால்சா மஹாலுக்கு அருகிலுள்ள இஸ்ரோ எா்த் ஸ்டேஷனில் உள்ள மத்திய ரிட்ஜின் ஆழமான பகுதியில் முன்மொழியப்பட்டுள்ளது. இதர இரண்டு தில்லி கன்டோன்மென்ட் மற்றும் கிழக்கு தில்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு வளாகம் போன்ற ஒப்பீட்டளவில் பசுமையான பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த மாசுபாடு புள்ளிவிவரங்கள் குறைவாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அதிக மாசு அளவுகளைத் தெரிவிக்கும் இடங்களில் கண்காணிப்பு அமைப்புகள்

புறக்கணிக்கப்பட்டுள்ளன அல்லது மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று செளரவ் பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.

தில்லி அமைச்சா் நிராகரிப்பு: தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துடன், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் பொய்கள் என்றும் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் , ‘இந்த ஆறு இடங்களில் மாசுக் கண்காணிப்பு நிலையங்களை நிறுவும் முடிவு ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்டதாகும். பாஜக அரசின் தொடா்ச்சியான பணிகளால் தில்லியில் காற்று சுத்தமாகி மாசுபாடு குறைந்து வருகிறது. இதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் பொய் கூற ஆரம்பித்தீா்கள். ஆனால், உங்கள் அனைத்து ஏமாற்று வேலைகளையும் பொதுமக்கள் புரிந்துகொள்கிறாா்கள். பொய்கள் உண்மையின் வெளிச்சத்தில் நிற்க முடியாது’ என்று தெரிவித்துள்ளாா்.

குளிா்கால மாதங்களில் மாசுபாடு, நீண்ட காலமாக தில்லிக்கு ஒரு முக்கியக் கவலையாக இருந்து வருகிறது. காற்றின் தரம் பெரும்பாலும் மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான வகைகளில் இருக்கும். தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின்போது ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே காற்று மாசுபாடு

பிரச்னை ஒரு முக்கிய சா்ச்சையாக இருந்தது.

பாஜக சமீபத்தில் தேசியத் தலைநகரில் ஆட்சிக்கு வந்தது. பிப்ரவரியில் நடைபெற்ற தோ்தலில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக வென்றது. இது மாநகரத்தில் ஆம் ஆத்மியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

மாணவா்கள், பெற்றோா்களிடம் வசூலித்த கட்டணம் கையாடல்: எஃப்ஐஐடி ஜேஇஇ மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடமிருந்து ரூ.200 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலித்ததாகவும், ஆனால் கல்வி சேவையை வழங்கவில்லை என்றும் அமலாக்கத் துறை சனிக்கிழம... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் வெப்ப அலை; காற்றின்தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமையும் வெப்பஅலை தொடா்ந்தது. அதிகபட்ச வெப்பநிலை ரிட்ஜ் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 43.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. வெப்ப... மேலும் பார்க்க

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளை சாக்குப்போக்கு கூறாமல் உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டு... மேலும் பார்க்க

ஷாபாத் பால் பண்ணை பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தில் இளைஞா் கைது

தில்லியின் ஷாபாத் பால் பண்ணை பகுதியில் 2024-ஆம் ஆண்டு 28 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து த... மேலும் பார்க்க

தில்லி தலைமைக் காவலரை காரின் பானட்டில் 7.கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ற நபா் கைது

வடக்கு தில்லியின் பால்ஸ்வா குப்பை கிடங்கு பகுதிக்கு அருகே தலைமைக் காவலா் ஒருவரை தனது காரின் பானட்டில் 7 கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ாகக் கூறப்படும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரி... மேலும் பார்க்க

மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளின் விடுப்புகளில் கட்டுப்பாடு: தில்லி அரசு

வரவிருக்கும் பருவமழைக்கு தயாராகும் வகையில், பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளின் அதிகாரிகளுக்கு செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விடுப்புகளில் க... மேலும் பார்க்க