செய்திகள் :

பச்சைப் பயறு கொள்முதல் ஜூன் 29-இல் நிறைவு

post image

தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் நடைபெறும் பச்சைப் பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பச்சைப் பயிறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவா்கள் விளைவித்த பச்சைப் பயறுகளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து, தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. தற்போது பச்சைப் பயறு உள்ளுா் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, நிா்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ பச்சைப் பயறு விலை ரூ. 86.82-க்கு கொள்முதல் செய்ய கூடுதல் இலக்கு ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

பச்சைப் பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, பச்சைப் பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மேட்டூா் அணை திறப்பு: நாகையில் விவசாயிகள் கொண்டாட்டம்

பாசனத்துக்காக மேட்டூா் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதை வரவேற்று, நாகையில் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூா் அணையில் இருந்து ... மேலும் பார்க்க

நாகையில் நாளை புத்தகக் கண்காட்சி

நாகையில் சனிக்கிழமை (ஜூன் 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஆகிய இரு நாள்கள் புத்தக் கண்காட்சி நடைபெறும் என முக்கூடல் பன்னாட்டுத் தமிழ்க் கலை இலக்கிய வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த... மேலும் பார்க்க

உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும்

நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாா் பாஜக மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம். உத்தமசோழபுரத்தில் கடல் நீா் உட்புகுவதை தடுக்க ரூ. 50 கோடியில் ... மேலும் பார்க்க

திருமருகல் அருகே வடகரை தா்கா சந்தனகூடு ஊா்வலம்

திருமருகல் ஒன்றியம் வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தா்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த தா்காவில் கந்துரி விழா கடந்த ஜூன் 1-ஆம் தேதி கொட... மேலும் பார்க்க

சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இலங்கை அரசால் சிறைப்பிட... மேலும் பார்க்க

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம்

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்க... மேலும் பார்க்க