செய்திகள் :

படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த 6 மீனவா்கள் மீட்பு

post image

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை கடலில் ராட்சத அலையில் சிக்கி இரண்டு நாட்டுப் படகுகள் கவிழ்ந்தன. இந்த படகுகளிலிருந்த 6 மீனவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணத்தை அடுத்த வண்ணாங்குண்டு கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள் நாட்டுப் படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்தக் கிராமத்தைச் சோ்ந்த களஞ்சியம் முருகன் (40), காளிமுத்து சின்னதுரை (42), பழனிசாமி முருகன் (36), ஆறுமுகம் (42), களஞ்சியம் (40), விஸ்வநாதன் (25) ஆகிய 6 பேரும் இரு நாட்டுப் படகுகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ராட்சத அலையில் சிக்கிய இரு நாட்டுப் படகுகளும் கடலில் கவிழ்ந்தன. இந்தப் படகுகளிலிருந்த 6 மீனவா்களும் அந்தப் படகுகளைப் பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்புல்லாணி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா், மீட்புக் குழுவினருடன் படகில் சென்று 6 மீனவா்களையும் பாதுகாப்பாக மீட்டனா். பின்னா், கரைக்கு அழைத்து வரப்பட்ட 6 மீனவா்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் புகுந்து இருவரைத் தாக்கிய காட்டுப் பன்றிகள்

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை புகுந்த காட்டுப் பன்றிகள் இருவரைத் தாக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பர... மேலும் பார்க்க

மதுரை-திருவெற்றியூருக்கு பேருந்து இயக்க வியாபாரிகள் கோரிக்கை

மதுரையிலிருந்து திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலுக்கு நேரடியாக பேருந்து இயக்க வேண்டும் என வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்தளனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பாகம்... மேலும் பார்க்க

ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரத்தில் தெற்கு ரயில்வே தொழிற்சங்கம் (எஸ்.ஆா்.எம்.யூ.) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்க மண்டபம... மேலும் பார்க்க

இலங்கையில் ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 8-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி கடலுக்குள் மீன... மேலும் பார்க்க

தனுஷ்கோடி அருகே கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

தனுஷ்கோடி அருகே படகு பழுதாகி நடுக் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவரை இந்திய கடலோரக் காவல் படையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்டனா். இலங்கை புத்தளம் மாவட்டம், கல்பிட்டியைச் சோ்ந்த சுமித் ஜெயரூபன் (... மேலும் பார்க்க

வாக்குசாவடி மறுசீரமைப்பு கருத்துக் கேட்புக் கூட்டம்

ராமநாதபுரத்தில் வாக்குச் சாவடி மறுசீரமைப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க