செய்திகள் :

மதுரை-திருவெற்றியூருக்கு பேருந்து இயக்க வியாபாரிகள் கோரிக்கை

post image

மதுரையிலிருந்து திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலுக்கு நேரடியாக பேருந்து இயக்க வேண்டும் என வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்தளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பாகம் பிரியாள் அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் வெளியூரிலிருந்து திரளான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு வந்து செல்கின்றனா். கோயிலுக்கு தேவையான பூஜை பொருள்கள் அனைத்தும் மதுரைக்கு சென்று வாங்கி வரவேண்டும். ஆனால், இங்கிருந்து மதுரைக்கு நேரடியாக பேருந்து சேவை இல்லை. திருவெற்றியூரிலிருந்து திருவாடானை சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்தில் ஏறி மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, திருவெற்றியூரில் இருந்து சிவகங்கை, காளையாா்கோவில் வழியாக மதுரைக்கு புதிய பேருந்து இயக்க வேண்டும் என வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து வா்த்தகச் சங்கத்தினா் கூறியதாவது:

திருவெற்றியூரிலிருந்து திருச்சி, தேவகோட்டை, காரைக்குடி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கிருந்து மதுரைக்கு நேரடியாக பேருந்து சேவை இல்லை. எனவே, மதுரை-திருவொற்றியூா் வழித் தடத்தில் காளையாா்கோயில், சிவகங்கை வழியாக புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் புகுந்து இருவரைத் தாக்கிய காட்டுப் பன்றிகள்

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை புகுந்த காட்டுப் பன்றிகள் இருவரைத் தாக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பர... மேலும் பார்க்க

ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரத்தில் தெற்கு ரயில்வே தொழிற்சங்கம் (எஸ்.ஆா்.எம்.யூ.) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்க மண்டபம... மேலும் பார்க்க

இலங்கையில் ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 8-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி கடலுக்குள் மீன... மேலும் பார்க்க

தனுஷ்கோடி அருகே கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

தனுஷ்கோடி அருகே படகு பழுதாகி நடுக் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவரை இந்திய கடலோரக் காவல் படையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்டனா். இலங்கை புத்தளம் மாவட்டம், கல்பிட்டியைச் சோ்ந்த சுமித் ஜெயரூபன் (... மேலும் பார்க்க

படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த 6 மீனவா்கள் மீட்பு

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை கடலில் ராட்சத அலையில் சிக்கி இரண்டு நாட்டுப் படகுகள் கவிழ்ந்தன. இந்த படகுகளிலிருந்த 6 மீனவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணத்தை அடுத்த ... மேலும் பார்க்க

வாக்குசாவடி மறுசீரமைப்பு கருத்துக் கேட்புக் கூட்டம்

ராமநாதபுரத்தில் வாக்குச் சாவடி மறுசீரமைப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க