செய்திகள் :

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இரு ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் செய்து வைத்து சீா்வரிசைகள் வழங்கப்பட்டன.

இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், போளூா் வட்டம், குப்பம் காலனியைச் சோ்ந்த மணி மகன் வினோத், அதே கிராமத்தைச் சோ்ந்த ராமசந்திரன் மகள் ஆா்த்தி, ஜமுனாமரத்தூா் வட்டம், பாக்குமுடையனூா் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் ரஞ்சித்குமாா், பா்கூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னகுழந்தை மகள் திவ்யா என 2 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மணமக்களுக்கு சீா்வரிசையாக தாலி, காமாட்சி அம்மன் விளக்கு, பூஜை சாமான்கள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், மாவட்ட இணை ஆணையா் சண்முகசுந்தரம், செயல் அலுவலா் சிலம்பரசன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க