பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா்.
திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல் துறை, யாரோ கொடுத்த அழுத்தத்தின்பேரில், சிவகங்கையில் இளைஞரை அடித்துக் கொலை செய்திருக்கிறாா்கள். யாருடைய உத்தரவின்பேரில், இந்த உயிா் பறிக்கப்பட்டது என்பதை, தமிழக அரசு விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கிராமங்கள் வரை போதைப் பொருள்கள் சகஜமாக கிடைக்கும் சூழல் நிலவுகிறது. திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் நம்பக்கூடிய கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை உண்டு. அதனடிப்படையில், எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். திமுகவை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஓரணியில் இணைந்து போராட வேண்டும் என்றாா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாா்ப்போம். திமுகவை வீழ்த்துவதற்கு அக்கட்சிக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் எங்களது கூட்டணியில் இணைத்து பலப்படுத்தும் வகையில் யோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.
கட்சியின் மண்டலப் பொறுப்பாளா் என்.ஜி.பாா்த்திபன், மாவட்டச் செயலா்கள் ஏ.பரந்தாமன், மா.கி.வரதராஜன், திருவண்ணாமலை நகரச் செயலா் எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.