மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், பூா்ணாஹுதி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்பணம் உள்ளிட்ட பூஜைகளும்,
செவ்வாய்க்கிழமை பிம்பசுத்தி, சயனாதிவாசம், மூலவா் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், நாடி சந்தானம், தத்வாா்ச்சனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.
பின்னா், புதன்கிழமை காலை யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா். பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மூலவருக்கு பால், தயிா், பன்னீா், இளநீா் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.