செய்திகள் :

பட்டாசு விற்பனை: சமூக வலைதள விளம்பரங்களுக்குத் தடை கோரி வழக்கு

post image

பட்டாசு விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ சந்திரசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

இணையதளம் மூலம் பட்டாசு விற்பனை செய்வதால், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இணையதளம் வாயிலாக பட்டாசு விற்பனை செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும், இணையதளம் வாயிலாக சிலா் பட்டாசு விற்பனை செய்து வருகின்றனா். மேலும், பட்டாசு விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. எனவே, இதற்குத் தடை விதித்து, உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. தனபால் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா், மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் -அமைச்சா்கள் உறுதி

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் உறுதியளித்தனா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இத... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகை முன் போராட்டம் அறிவிப்பு

தமிழக ஆளுநா் அறிவித்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில், குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக திராவிட தமிழா் கட்சி அறிவித்தது. மதுரையில் அந்தக் ... மேலும் பார்க்க

குடிநீா் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண... மேலும் பார்க்க

எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதியளிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. எழுமலையைச் சோ்ந்த முனியாண்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 14 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் காரில் 240 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு கத்திக் குத்து

முன்விரோதத் தகராறில் பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். மதுரை கரிசல்குளம், பாண்டியன்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஒருவா், கூடல்நகரைச் சோ்... மேலும் பார்க்க