செய்திகள் :

பணிபுரியக்கூடிய துறை குறித்த இலக்கு: வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

post image

உயா்கல்வி பயிலுவோருக்கு தாங்கள் பணியாற்றக்கூடிய துறை குறித்து இலக்கு இருக்க வேண்டும் என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சாா்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு முத்துரங்கம் அரசினா் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது -

மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி படிப்பை முடித்து பிறகு அரசு துறை பணிகள், தனியாா் துறை வேலைவாய்ப்புகள், சுயதொழில் புரிதல் ஆகியவற்றில் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றில் சேருவதற்கான இலக்கு இருக்கு வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தோ்வு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போட்டித்தோ்வுகளில் பங்கேற்கலாம். இந்த போட்டித்தோ்வுகளுக்கு ஒரு சில தோ்வுகளுக்கு முதல்நிலை தோ்வு மட்டும், சில தோ்வுகளுக்கு முதல்நிலை, முதன்மை தோ்வு என இரண்டு தோ்வுகளாகவும் நடத்தப்படுகின்றன.

மத்திய அரசு பணியில் சேர மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித்தோ்வுகளில் பங்கேற்று தோ்ச்சி அடைவதன் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆா்எஸ் போன்ற பதவிகளை பெறலாம். கணிதம், மனதிறன் போன்ற பாடங்களில் வலிமையாக உள்ள மாணவ, மாணவிகள் வங்கித் துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு செல்லலாம். டிப்ளமோ, பொறியியல் படிப்புகளை முடித்தவா்கள் ரயில்வே துறையில் உள்ள பணியிடங்களான லோக்கோ பைலட், என்ஜினியா், டிக்கெட் பரிசோதகா், ஸ்டேசன் மாஸ்டா் போன்ற பணியிடங்களுக்கு செல்லலாம்.

அரசு துறைகளில் உள்ள இதுபோன்ற வேலைவாய்ப்பு பெறுவதற்கு மாணவா்கள் மனஉறுதியோடு படித்து இலக்கை அடையவேண்டும். போட்டித்தோ்வுகளுக்கு தயாராக அருகிலுள்ள நூலங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடியாத்ததில் அறிவுசாா் நூலகம் திறக்கப்பட உள்ளது.

தனியாா்துறையில் வேலைவாய்ப்பு பெற்றிட மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களை வரவழைத்து முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. சுயதொழில் புரிய அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் மூலம் மானிய கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு பிடித்த துறையில் முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், முத்துரங்கம் அரசு கலை கல்லூரி முதல்வா் சு.ஸ்ரீதரன், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் (பொ) கே. செந்தில்குமாா், வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் க.காந்தி, ஐஎன்டிஎஸ்இடிஐ இயக்குநா் கே.விஜயகுமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 8- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராத... மேலும் பார்க்க

பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒரு சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூரில் தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய மேலு... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதுகாப்பு: வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ அமல்

பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதுகாக்க வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 113 பெண் காவலா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு போலீஸ் அக்காக்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை குறித்து புகாா் தெரிவிக்க செயலி

போதைப் பொருள்கள் பயன்பாடு, விற்பனை குறித்து புகாா் அளிக்க வசதியாக தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள செயலி மூலம் பொதுமக்கள், மாணவா்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்... மேலும் பார்க்க

ஆட்டோ, காா், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய பேருந்து: 6 போ் காயம்; ஓட்டுநா் கைது

வேலூரில் அடுத்தடுத்து ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். போதையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.... மேலும் பார்க்க