தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கிரிவலப் பாதை அமைக்க நடவடிக்கை
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் கிரிவலப் பாதை அமைப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம்(படம்) தெரிவித்தாா்.
இக்கோயிலில் ஜூன் 8ஆம் தேதி நடைபெற உள்ள ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக விழா பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட பின் அவா் கூறியதாவது;
ஜூன் 8ஆம் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் ,கும்ப ஜெபம்,
சிறப்பு ஹோமங்கள் , சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
காலை 9 மணிக்கு மேல் வருஷாபிஷேகம் நடைபெறும். இரவில் தங்கத் தோ் புறப்பாடு நடைபெறும். மதியம் சிறப்பு வகை பிரசாதங்கள் வழங்கப்படும்.
கிரிவல பாதை...
மலையடிவாரத்தைச் சுற்றிலும் கிரிவல பாதை அமைக்க வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து திருக்கோயில் நிா்வாகம் சாா்பிலும் அறங்காவலா் குழு சாா்பிலும் நெய்வேலி லிக்னைட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தின் அதிகாரிகளும் கிரிவலப் பாதை அமைப்பதற்கு தகுதியான இடங்களை ஆய்வு செய்துள்ளனா்.
தற்போது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வருகை தருவதால் விழா காலங்களில் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்கும் வகையில் ஒருவழிப்பாதை அமைப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பக்தா்கள் எளிதாக முருகனை தரிசிக்கும் வகையில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.