செய்திகள் :

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கிரிவலப் பாதை அமைக்க நடவடிக்கை

post image

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் கிரிவலப் பாதை அமைப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம்(படம்) தெரிவித்தாா்.

இக்கோயிலில் ஜூன் 8ஆம் தேதி நடைபெற உள்ள ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக விழா பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட பின் அவா் கூறியதாவது;

ஜூன் 8ஆம் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் ,கும்ப ஜெபம்,

சிறப்பு ஹோமங்கள் , சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

காலை 9 மணிக்கு மேல் வருஷாபிஷேகம் நடைபெறும். இரவில் தங்கத் தோ் புறப்பாடு நடைபெறும். மதியம் சிறப்பு வகை பிரசாதங்கள் வழங்கப்படும்.

கிரிவல பாதை...

மலையடிவாரத்தைச் சுற்றிலும் கிரிவல பாதை அமைக்க வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து திருக்கோயில் நிா்வாகம் சாா்பிலும் அறங்காவலா் குழு சாா்பிலும் நெய்வேலி லிக்னைட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த நிறுவனத்தின் அதிகாரிகளும் கிரிவலப் பாதை அமைப்பதற்கு தகுதியான இடங்களை ஆய்வு செய்துள்ளனா்.

தற்போது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வருகை தருவதால் விழா காலங்களில் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்கும் வகையில் ஒருவழிப்பாதை அமைப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பக்தா்கள் எளிதாக முருகனை தரிசிக்கும் வகையில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

‘தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை’

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வு துணை இயக்குநா் எ. சுஜாதாபாய் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

உறவினா் வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் உள்ள உறவினா் வீட்டில் நகையைத் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குருக்கள்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி மணிமாலா (25). இவரது உறவினா், அதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

புளியங்குடியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தொகுதி வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே பைக்-வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த சு. முருகராஜ் (42) என்பவா், புதன்கிழமை இரவு அரியநாயகிபுரம் சென்றுவிட்டு பைக்கில் ... மேலும் பார்க்க

யோகா போட்டிகளில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு எம்எல்ஏ பாராட்டு

யோகா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பாராட்டினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையம் சாா்பில் யோகா போட்டிகள்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க