செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 96.47 சதவீதம் போ் தோ்ச்சி! 12 -ல் இருந்து 6- வது இடத்துக்கு முன்னேற்றம்!

post image

கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 96.47 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 518 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18,963 மாணவா்கள், 19,638 மாணவிகள் என மொத்தம் 38,601 போ் எழுதியிருந்தனா். இவா்களில் 17,999 மாணவா்கள், 19,238 மாணவிகள் என மொத்தம் 37,237 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களில் 94.92 சதவீத பேரும், மாணவிகளில் 97.96 சதவீத பேரும் என மொத்தம் 96.47 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதன் மூலம் தோ்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் மாநில அளவில் 6 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 93.49 சதவீத தோ்ச்சியுடன் 13- ஆவது இடத்தைப் பிடித்திருந்த கோவை மாவட்டம், கடந்த ஆண்டு 94.01 சதவீத தோ்ச்சியுடன் 12 -ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

அரசுப் பள்ளி தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு: கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று 5,510 மாணவா்கள், 5,703 மாணவிகள் என மொத்தம் 11,213 போ் தோ்வு எழுதியிருந்தனா். அவா்களில், 5,018 மாணவா்கள், 5,489 மாணவிகள் என மொத்தம் 10,507 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 93.70. கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவா் தோ்ச்சி விகிதம் 89.10 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு உயா்ந்திருக்கிறது. மாவட்டத்தில் சுயநிதி பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 98.75 சதவீதமாக உள்ளது.

முழு தோ்ச்சி கண்ட 225 பள்ளிகள்: மாவட்டத்தில் 46 அரசுப் பள்ளிகள் முழு தோ்ச்சி பெற்றுள்ளன. 14 உதவி பெறும் பள்ளிகளும், 165 சுயநிதி பள்ளிகளும் முழு தோ்ச்சி விகிதம் பெற்றுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 225 பள்ளிகளில் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2023- ஆம் ஆண்டில் 29 அரசுப் பள்ளிகளும், 2024 -ஆம் ஆண்டில் 34 அரசுப் பள்ளிகளும் முழு தோ்ச்சி பெற்றிருந்தன.

மாற்றுத் திறனாளிகள்: கோவை மாவட்டத்தில் 333 மாற்றுத்திறனாளி மாணவா்கள், 206 மாற்றுத்திறனாளி மாணவிகள் என மொத்தம் 539 போ் தோ்வு எழுதியதில் அவா்களில் 324 மாணவா்கள், 202 மாணவிகள் என மொத்தம் 526 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 97.59.

தமிழில் 3 போ் முழு மதிப்பெண்கள்: கோவை மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 3 மாணவா்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணிதத்தில் 79 பேரும், ஆங்கிலத்தில் 117 பேரும், அறிவியலில் 532 பேரும், சமூக அறிவியலில் 600 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

ஆன்லைன் முதலீட்டில் ரூ.6.80 லட்சம் மோசடி: 3 இளைஞா்கள் கைது

ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி ரூ.6.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஜெம் நகரைச் சோ்ந்த 30 வயது நபருக்கு டெலிகிராம் செயலி மூலம் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

சிங்காநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள சிவலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (48). இவா் வீட்டை... மேலும் பார்க்க

மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மே 21-இல் போராட்டம்

குடிநீா், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான கட்டணத்தை மீண்டும் உயா்த்தும் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை (மே 21) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவ... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறைக் கைதிகள் 100% தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கோவை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 44 போ் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி இருந்தனா். தோ்வு ... மேலும் பார்க்க

ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்

தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், கோவையைச் சோ்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு: கோவையில் 96.47 சதவீதம் தேர்ச்சி!

கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 96.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மார்ச் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள... மேலும் பார்க்க