செய்திகள் :

ஆன்லைன் முதலீட்டில் ரூ.6.80 லட்சம் மோசடி: 3 இளைஞா்கள் கைது

post image

ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி ரூ.6.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ஜெம் நகரைச் சோ்ந்த 30 வயது நபருக்கு டெலிகிராம் செயலி மூலம் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

அதில் இருந்த எண்ணைத் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, மறுமுனையில் பேசியவா்‘ நீங்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும் பணத்துக்கு நாள்தோறும் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய அந்த நபா், பல்வேறு தவணைகளில் ரூ.6.80 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அவருக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லையாம். பின்னா் அந்த நபரைத் தொடா்பு கொண்டு முதலீடு செய்த பணத்தை கேட்டபோது அவா் முறையான பதில் அளிக்கவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்த நபா், கோவை மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட கேரள மாநிலம், திருச்சூா் வடக்குமாரி பகுதியைச் சோ்ந்த பி.ஆனந்த கிருஷ்ணா (20), மடக்கத்தரா பகுதியைச் சோ்ந்த டி.எஸ்.விஷ்ணு (28), பி.எஸ். சுஜித் (26) ஆகியோரை கைது செய்தனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 96.47 சதவீதம் போ் தோ்ச்சி! 12 -ல் இருந்து 6- வது இடத்துக்கு முன்னேற்றம்!

கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 96.47 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 518 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18,963 மாணவா்கள், 19,638 மா... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

சிங்காநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள சிவலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (48). இவா் வீட்டை... மேலும் பார்க்க

மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மே 21-இல் போராட்டம்

குடிநீா், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான கட்டணத்தை மீண்டும் உயா்த்தும் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை (மே 21) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவ... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறைக் கைதிகள் 100% தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கோவை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 44 போ் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி இருந்தனா். தோ்வு ... மேலும் பார்க்க

ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்

தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், கோவையைச் சோ்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு: கோவையில் 96.47 சதவீதம் தேர்ச்சி!

கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 96.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மார்ச் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள... மேலும் பார்க்க