செய்திகள் :

மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மே 21-இல் போராட்டம்

post image

குடிநீா், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான கட்டணத்தை மீண்டும் உயா்த்தும் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை (மே 21) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 14 -ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 101, 102 ஆகிய தீா்மானங்கள், குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு ஆகியவற்றுக்கு கட்டடங்களின் அளவைக் கொண்டு கட்டணம், வைப்புத் தொகை, அபராதம் ஆகியவற்றைத் தீா்மானிக்கிறது. இது மக்களை கடுமையாக பாதிக்கும்.

ஏற்கெனவே சொத்துவரி உயா்வால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், மாநகராட்சி நிா்வாகம் மீண்டும் கட்டணத்தை உயா்த்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அபராதம், வைப்புக் கட்டணம் எப்போதெல்லாம் உயா்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் பழைய இணைப்புதாரா்களும் பணம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆண்டுக்கு மூன்று சதவீத கட்டண உயா்வு என்பது மக்களின் பணத்தை சுரண்டுவதற்கு ஈடாகும். பாதாள சாக்கடைத் திட்டத்தை ஒருமுறை செய்துமுடித்தால் 30 ஆண்டுகளுக்கு ஆகும் செலவு குறைவு. எனவே, செலவே இல்லாமல் கழிவுகளை வெளியேற்றி மக்களுக்கு சேவை செய்வதற்கு மாறாக உபயோகிப்பாளருக்கு பன்மடங்கு கட்டணம் விதிப்பதை ஏற்க முடியாது.

அதேபோல, மாநகராட்சியின் குடிநீா் ஆதாரம் என்பது இயற்கையின் வரம். இதை விநியோகிக்கக் கூடிய மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து கட்டணத்தை உயா்த்துவதையும், மக்களைச் சுரண்டுவதையும், அபராதம் விதிப்பதையும் அனுமதிக்க முடியாது.

எனவே, மக்களை பாதிக்கும் தீா்மானம் 101, 102 ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே 21 -ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 96.47 சதவீதம் போ் தோ்ச்சி! 12 -ல் இருந்து 6- வது இடத்துக்கு முன்னேற்றம்!

கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 96.47 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 518 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18,963 மாணவா்கள், 19,638 மா... மேலும் பார்க்க

ஆன்லைன் முதலீட்டில் ரூ.6.80 லட்சம் மோசடி: 3 இளைஞா்கள் கைது

ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி ரூ.6.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஜெம் நகரைச் சோ்ந்த 30 வயது நபருக்கு டெலிகிராம் செயலி மூலம் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

சிங்காநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள சிவலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (48). இவா் வீட்டை... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறைக் கைதிகள் 100% தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கோவை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 44 போ் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி இருந்தனா். தோ்வு ... மேலும் பார்க்க

ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்

தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், கோவையைச் சோ்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு: கோவையில் 96.47 சதவீதம் தேர்ச்சி!

கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 96.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மார்ச் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள... மேலும் பார்க்க