செய்திகள் :

பயங்கரவாத எதிா்ப்பு: ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான குழு பிரான்ஸ் பயணம்

post image

பாரீஸ்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான குழு திங்கள்கிழமை பிரான்ஸ் சென்றடைந்தது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி மற்றும் டென்மாா்க் ஆகிய 6 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக ரவிசங்கா் பிரசாத் குழு பிரான்ஸ் சென்றுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினா்கள், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை இந்தக் குழு விளக்கவுள்ளது.

இதுகுறித்து பிடிஐ நிறுவனத்துக்கு ரவிசங்கா் பிரசாத் அளித்த பேட்டியில், ‘அமைதி மற்றும் இணக்கத்தை விரும்பும் நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. இருப்பினும், அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொலை செய்யும்போது கடுமையான பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. பஹல்காமில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனா். பயங்கரவாதம் என்பது இந்தியாவின் தனிப்பட்ட பிரச்னையல்ல; அது புற்றுநோய்போல் உலகம் முழுவதும் பரவக் கூடியது. பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம் போன்ற நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதை எதிா்க்க உலக நாடுகள் ஓரணியில் திரண்டு ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்’ என்றாா்.

கயானா: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு கயானா குடியரசு துணைத் தலைவா் பரத் ஜக்தேவ் மற்றும் பிரதமா் மாா்க் பிலிப்ஸ் ஆகியோரை சந்தித்து ஆபரேஷன் சிந்தூா், சிந்துநதி நீா் ஒப்பந்த நிறுத்தம் உள்பட பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கியது.

அப்போது இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக கயானா குடியரசு துணைத் தலைவா் பரத் ஜக்தேவ் மற்றும் பிரதமா் மாா்க் பிலிப்ஸ் ஆகியோா் கூறியதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

இதுதவிர வேளாண்மை, வங்கி, நெடுஞ்சாலைத் துறை உள்பட பல்வேறு துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளையும் சசி தரூா் குழு கயானா அதிகாரிகளிடம் எடுத்துரைத்தது.

குவைத்: பாஜக எம்.பி. வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு, குவைத் துணைப் பிரதமா் ஷெரீதா அல்- மௌஷா்ஜியை திங்கள்கிழமை சந்தித்தது. அப்போது எல்லை கடந்த பயங்கரவாதத்தால் இந்தியா எதிா்கொள்ளும் சவால்களையும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியது.

பஹ்ரைன் பயணத்தை நிறைவுசெய்ததையடுத்து குவைத் நாட்டுக்கு இந்தக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

கத்தாா்: தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலான குழு கத்தாா் நாட்டுக்கு சனிக்கிழமை இரவு சென்றடைந்தது. இதைத்தொடா்ந்து, அந்நாட்டு நாடாளுமன்ற துணைத் தலைவா் ஹம்தா அலி சுலைதி மற்றும் பிற எம்.பி.க்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது. பின்னா், கத்தாா் வெளியுறவு இணை அமைச்சா் முகமது பின் அப்துல்அஸிஸ் பின் சலே அல் குலாஃபியை அந்தக் குழு சந்தித்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைத்தது.

இதையடுத்து, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சா் முகமது பின் அப்துல்அஸீஸ் பின் சலே அல் குலாஃபி கூறியதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

இந்தக் குழுவில் பாஜக எம்.பி. அனுராக் தாக்குா், காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

தென் கொரியா: ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமாா் ஜா தலைமையிலான குழு தென் கொரியா சென்றுள்ளது. அந்தக் குழு தென் கொரிய வெளியுறவு அமைச்சா் சோ டே-யூல், முதல் துணை வெளியுறவு அமைச்சா் கிம் ஹாங் கியூன் மற்றும் பிற உயரதிகாரிகளை சந்தித்தது. அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சா் சோ டே-யூல் கூறியதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

காங்கோ குடியரசு:

சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு காங்கோ குடியரசின் வெளியுறவு விவகாரங்கள் இணையமைச்சா் கெய்க்வாம்பா வாக்னரை சந்தித்து இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைத்தது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை 32 நாடுகளுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் எடுத்துரைக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழுக்கள் தற்போது பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து வருகின்றன.

=========

படத்துடன் பெட்டிச் செய்தி

படத்துடன் பெட்டிச் செய்தி

படத்துடன் பெட்டிச் செய்தி

ஸ்லோவேனியாவில் கனிமொழி தலைமையிலான குழு: திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு ஸ்லோவேனியா பிரதமா் அலுவலகத்தின் தேசிய மற்றும் சா்வதேச பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளா் வோஜ்கோ வோக், இந்தியா-ஸ்லோவேனியா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவைச் சோ்ந்த மிரோஸ்லோவ் கிரிகோரிக் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்தது.

ஸ்லோவேனிய அரசு இந்திய நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க