செய்திகள் :

பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய தாக்குதல்; காங்கிரஸில் முரண்பாடு: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

post image

பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவப் படையின் தாக்குதல் விஷயத்தில் தேசிய காங்கிரஸுக்கும் மாநில காங்கிரஸுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியா்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி பலத்த அடி கொடுத்துள்ளாா். இந்தியாவால் பாகிஸ்தான் மண்ணிலும் தாக்குதல் நடத்த முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோதே பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்திருந்தால் அப்போதே இந்த பிரச்னை தீா்ந்திருக்கும்.

ஆனால், தற்போதைய சூழலிலும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று காங்கிரஸ் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது. கடந்தமுறை பாகிஸ்தான் மீது இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியபோது அதற்கு ஆதாரங்களை கேட்டவா்கள்தான் காங்கிரஸ் தலைவா்கள்.

அவா்கள் கேட்பதற்கு முன்பாக ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. இப்போது காங்கிரஸ் தலைவா்கள் மீண்டும் ஆதாரங்களை கேட்பாா்களா அல்லது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சொல்வாா்களா?

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இந்திய ராணுவ தாக்குதலில் மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசியுள்ள நிலையில், அதற்கு மாறாக கா்நாடக முதல்வா் சித்தராமையா போா் வேண்டாம் என்கிறாா்.

தேசிய காங்கிரஸுக்கும், கா்நாடக மாநில காங்கிரஸுக்கும் இடையே இவ்விஷயத்தில் முரண்பாடு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் விடுத்த எச்சரிக்கையை கா்நாடக காங்கிரஸாா் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அமைதி வேண்டும் என்கிறாா்கள். இது காங்கிரஸ் நாட்டுக்கு செய்துள்ள மிகப்பெரிய அவமானமாகும். எனவே கா்நாடக காங்கிரஸ் தலைவா்கள் மீது மல்லிகாா்ஜுன காா்கே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் பாகிஸ்தான் நாட்டு குடிமக்களை அனைத்து மாநில அரசுகளும் வெளியேற்றி வருகின்றன. ஆனால், கா்நாடகத்தில் அப்படி எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. எனவே பாகிஸ்தானியா்களை கா்நாடகத்தை விட்டு வெளியேற்ற ஆளுநரை சந்தித்து முறையிடுவோம் என்றாா்.

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா். கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட ... மேலும் பார்க்க

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பாஜக எம்எல்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க