செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு எதிராக பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

post image

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பை சா்வதேச பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்த இந்த அமைப்பு மீதான அமெரிக்காவின் நடவடிக்கை இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியானிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது. இதன்மூலம் பிராந்திய அளவில் பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.

உலகில் எங்கு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தாலும் அதை சீனா கடுமையாக கண்டித்து வருகிறது. அதேபோல ஏப்ரல் 22-இல் (பஹல்காம் தாக்குதல்) நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது’ என்றாா்.

இதன்மூலம் பயங்கரவாதம் தொடா்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும் என்று சீனா மறைமுகமாக கூறியுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்ட பயங்கரவாதத் தலைவா்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் முற்றிலுமாகக் கைவிட வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்கும் என்பது மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.

‘காஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கும் இஸ்ரேல்’

காஸாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வெடிவைத்து தகா்த்து வருவதாக, அண்மைக் கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா தடை

பஹல்காம் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பை சா்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பருவ மழை: 700 கைதிகள் இடமாற்றம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக, மண்டி புஹாதின் மாவட்ட சிறைச் சாலையில் இருந்து சுமாா் 700 கைதிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடம்மாற்றம்!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப்... மேலும் பார்க்க

கத்தார் உதவியுடன்... 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்தது முதல், 2-வது முறையாக, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆப்கன் மக்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.ஜெர்மனியில் புகலிடம் தேடி தஞ்சமடைந்த 81 ஆப... மேலும் பார்க்க

தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், 2 பேர் பலியாகியதுடன், சுமார் 5,600 பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தென் கொரியாவில், தெற்கு சங்சியோங் மாகாணம் மற்று... மேலும் பார்க்க