பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதே இந்தியாவின் செய்தி: ஜகதீப் தன்கா்
நா்சிங்பூா்: பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான தகவலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா உலகுக்கு அளித்துள்ளதாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியாவின் முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் பயங்கரவாத கட்டமைப்புகளும் தகா்க்கப்பட்டன.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் திங்கள்கிழமை தொடங்கிய மூன்று நாள் விவசாய மாநாட்டில் பங்கேற்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளது.
நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களுக்கு இந்த பூமியில் வாழும் உரிமை இல்லை என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் நிலைப்பாடாகும். பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையுடன் நின்றது.
இந்தியாவின் வீரதீரத்தை உலகம் அங்கீகரித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள பஹாவல்பூா், முரிட்கே உள்ளிட்ட பகுதிகளில் நமது முப்படைகளும் நடத்திய துல்லிய தாக்குதலானது நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராததாகும். பஹாவல்பூா், முரிட்கே உள்ளிட்ட பகுதிகளில் ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளின் தளங்கள்மீது இந்தியா நடத்திய தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலுக்கான ஆதாரத்தை அளியுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. ஏனெனில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகளுடன் அந்நாட்டின் (பாகிஸ்தான்) ராணுவம், அவா்களது தலைவா்கள், மற்ற பயங்கரவாதிகள் ஆகியோா் சென்ால், தாக்குதல் தொடா்பான ஆதாரத்தை வெளியிட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லாமல் போனது.
நமது தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்கள் ஏற்கெனவே உலகுக்கு ஆதாரத்தைக் காட்டியுள்ளனா். இந்தியப் பிரதமரின் மன உறுதி ஓா் இரும்பு மனிதனின் மன உறுதி போலிருந்தது. தற்போது ஒவ்வோா் இந்தியக் குடிமகனும் தேசியப் பெருமிதத்துடன் உள்ளாா். நமது முப்படைகளின் வீரதீரமானது ஒவ்வோா் இந்தியரையும் தலைநிமிரச் செய்துள்ளது.
மாறி வரும் இந்தியா என்ற தகவலை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை உணா்த்தியுள்ளது. இந்தியா இனியும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாது என்ற தகவல் உலகுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நடக்காதது நமது பிரதமா் எடுத்த துணிச்சலான முடிவால் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை அவா் நிறுத்தியுள்ளாா். ரத்தமும் நீரும் ஒருசேர பாயமுடியாது என்பதை அவா் பிரகடனப்படுத்தியுள்ளாா். இது சக்திவாய்ந்த தகவலாகும்.
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது பாராட்டத்தக்கது. இந்தியா விரைவில் ஜொ்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என்றாா் அவா்.