செய்திகள் :

பயங்கரவாதம் இருநாடுகளுக்கு மட்டுமான பிரச்னை அல்ல: அமைச்சர் ஜெய்சங்கர்!

post image

பயங்கரவாதம் இருநாட்டு பிரச்னையாக மட்டும் பார்க்காமல், சர்வதேச அளவிலான பிரச்னையாகக் கருதப்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மேக்ஸிமே பெர்வோட் மற்றும் லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசுகையில், 2016-ம் ஆண்டு பிரசெல்ஸ் நகரத்தில் நடைபெற்ற தாக்குதலைக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்தை ஒரு நாட்டின் பிரச்னை இல்லை என்பதை உணர்த்துங்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

”இதை அதிகம் ஊடகத்தின் வாயிலாகப் பார்க்காதீர்கள், ஏனெனில் உங்களுக்குத் தெரியும் பெரும்பாலான ஊடகங்கள் நடுநிலையாக இருப்பதில்லை. பயங்கரவாதத்தை ஐரோப்பாவிலுள்ள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இதை பெரிய அளவில் அனுபவித்தது இல்லை.

இங்கும் பயங்கரவாதம் நடைபெறுகிறது. ஆனால், எந்தவொரு ஐரோப்பிய நாடும் அவர்களது அண்டை நாடும் பயங்கரவாதத்தைத் தங்களது கொள்கையாகக் கொண்டுச் செயல்படுவதில்லை. இதனால், நான் சிறிது நேரம் செலவிட்டு அவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்கிறேன்.

பயங்கரவாதம் போன்ற பிரச்னைகளுக்கான செய்தி என்னவென்றால், இதை இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னையாகக் கருதாதீர்கள். இது வெறும் இந்தியாவின் பிரச்னையாக நான் கருதவில்லை. அதாவது, நீங்கள் கடந்த 20-30 ஆண்டுகளில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவங்களின் வரலாற்றைப் பார்த்தால், அவற்றுக்கு, நேரடியாக பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கும். கைரேகைகள், தடயங்கள் அல்லது அங்கிருந்து யாரேனும் இங்கு வருவது. இதுபோன்றவைகள் அனைத்தும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அங்கு அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களைத் தகர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் தலைதூக்கிய கரோனா: ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது!

7 ஆயிரத்தைக் கடந்த கரோனா: ஒரேநாளில் 306 பேருக்குப் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் ... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: கூலிப்படைக்கு சோனம் கொடுத்த தொகை எத்தனை லட்சம் தெரியுமா?

இந்தூா்/ஷில்லாங்: மேகாலய மாநிலத்துக்கு தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான சோனம், கூலிப்படையினருக்கு ரூ.20 லட்சம் கொடுத்திருப்பது தெரிய வந... மேலும் பார்க்க

பைக் இல்லையா..? அப்போ வரதட்சிணையாக சிறுநீரகம் வேண்டும்..! மருமகளை அதிர்ச்சியடைய வைத்த மாமியார்!

பிகாரில் வரதட்சிணையாக மருமகளி்ன் சிறுநீரகத்தை கேட்டு மாமியார் ஒருவர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்.பைக், நகை தரமுடியாதா? அப்போது உன்னுடைய சிறுநீரகத்தை வரதட்சிணையாக கொடுக்க வேண்டும் என... மேலும் பார்க்க

தேனிலவு வழக்கு: கொலைக் குற்றவாளியை கன்னத்தில் அறைந்த விமானப் பயணியால் பரபரப்பு!

மேகாலயத்தில் தேனிலவு சென்ற கணவனை மனைவியே கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய விவகாரத்தில், கைதான குற்றவாளியை விமானப் பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மத்திய பிரதே... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வருக்கு எதிரான மாற்று நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

புது தில்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்பான மாற்று நில முறைகேடு வழக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆ... மேலும் பார்க்க