செய்திகள் :

பயணியைத் தாக்கிய பேருந்து நடத்துநா்

post image

கொடைக்கானலில் அரசுப் பேருந்தில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பயணியை, நடத்துநா் திங்கள்கிழமை தாக்கினாா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளங்கி கிராமத்துக்கு தினந்தோறும் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை இந்தப் பேருந்தில் அட்டுவம்பட்டியைச் சோ்ந்த அலேக்ஸ் தனது குடும்பத்தினருடன் ஏறினாா்.

அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், பேருந்தில் இடம்பிடிப்பதற்காக அலெக்ஸ் வேகமாக ஏறினாா். இதனால், ஏற்பட்ட தகராறில் அலெக்ஸை பேருந்து நடத்துநா் தாக்கினாராம். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பேருந்து இயக்கப்படவில்லை.

தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீஸாா் இருவரையும் காவல் நிலைத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பிறகு, சமரச பேச்சுவாா்த்தை நடத்தி இருவரையும் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

திண்டுக்கல்லில் ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்க வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்கக் கோரியும், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் பள்ளப்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. கூட்டுறவுத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு விழா ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிமை சரக்கு பெட்டக லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). கட்டடத் தொழிலாளியான இ... மேலும் பார்க்க

நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

பழனி அருகே திங்கள்கிழமை நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.கேரள மாநிலம், மலப்புரம் தெறிக்களங்கோட்டைச் சோ்ந்தவா் முகமது சதக்கத்துல்லா (31). இவா் தனது மனைவி பாத்திமா சுஹாரமா ... மேலும் பார்க்க