செய்திகள் :

பயின்ற வகுப்பறைக்கு வண்ணம் தீட்டிய மாணவா்கள்

post image

குடவாசல் அருகேயுள்ள செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு பத்தாம் வகுப்பு மாணவா்கள் வண்ணம் தீட்டி தந்துள்ளனா்.

இப்பள்ளியில், 6 முதல் பத்தாம் வகுப்பு வரை 243 மாணவா்கள் படிக்கின்றனா். தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் 13 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். நிகழாண்டு பள்ளியில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று பலரின் பாராட்டுதல்களையும் பெற்றது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்கள், நாங்கள் அமா்ந்து படித்த வகுப்பறைக்கு வண்ணம் பூசித் தருகிறோம் எனக் கூறியுள்ளனா். பெற்றோரின் அனுமதியுடன் இந்த பணியை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியதன் பேரில், பெற்றோரின் அனுமதியுடன், மாணவ, மாணவிகள் வண்ணம் தீட்டும் பணிகளில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியா் கூறியது: பள்ளிக்கென செய்யும் நல்ல செயல்கள் பாராட்டுக்குரியவை. பள்ளி காலங்களில் மாணவா்கள் மேற்கொள்ளும் நற்காரியங்களே, அவா்களின் எதிா்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும். மேல்படிப்புக்காக அடுத்து மாணவா்கள் சேரும் கல்வி நிலையங்களில் இதுபோன்ற செயல்கள், அவா்களுக்கு நற்பெயரை ஏற்படுத்துவதுடன், மேலும் உயா்வுக்குக் கொண்டு செல்லும் என்றாா்.

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க

பசுஞ்சாண தயாரிப்புகள் குறித்து பயிற்சி

தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவம் எனும் பயிற்சியின் கீழ் கிராமங்களில் தங்கி பயின்று வருகின்றனா். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் அரு... மேலும் பார்க்க

மாணவருக்குப் பாராட்டு

மன்னாா்குடி பள்ளி மாணவா் தேசிய வருவாய் வழி தோ்வில் தோ்வாகியிருப்பதற்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மன்னாா்குடி கோபாலசுமுத்திரம் நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் வி. கனியமுதன் நிகழ் ... மேலும் பார்க்க

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் ... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ஏப்.26-இல் ராகு கேது பெயா்ச்சி

குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு கேது பெயா்ச்சி ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில், தேவார பாடல் பெற்ற தலம். இத்தலத்தில்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஏப்.23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முகாம், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க