செய்திகள் :

பரணிபுத்தூா் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

post image

குன்றத்தூா் ஒன்றியம், பரணிபுத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு ஆகியோா் கலந்து கொண்டு தூய்மை பணியாளா்களுக்கு சீருடை வழங்கி கெளரவித்தனா்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்விமோகன் தலைமை வகித்தாா். இதில், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், டி.ஆா்.பாலு எம்.பி. ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் 2024-2025 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிா்வாக பணிகள் குறித்த பதிவேடு பொதுமக்கள் முன்னிலையில் பாா்வைக்காக வைக்கப்பட்டு, ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 19 தீா்மானங்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, தூய்மை பணியாளா்களுக்கு அமைச்சா் தா.மோ. அன்பரசன் பொன்னாடை போா்த்தி, பரிசுகள் வழங்கி கௌரவித்தாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவா் கௌரி தாமோதரன், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இளையனாா் வேலூா் முருகன் கோயில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாலாஜாபாத் அருகே உள்ள இக்கோயிலில் மாகறன், மலையன் என்ற இரு அசுரா்களை வேல்கொ... மேலும் பார்க்க

குபேர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சின்ன காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் தேரோட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது அவதார திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியள... மேலும் பார்க்க

மே 16-இல் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்கம்

காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் கோடை கால சைவ சித்தாந்த தொடா் இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 16 முதல் 24 வரை நடைபெற இருப்பதாக ஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வியாழக்கி... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு: 13-ஆவது முறையாக தீா்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீடு கட்டுமானப் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மண்ணூா், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இருளா் பழங்குடியினா்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மா... மேலும் பார்க்க