செய்திகள் :

பழங்குடியினருக்கு வீடு கட்டுமானப் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

மண்ணூா், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இருளா் பழங்குடியினா்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட மண்ணூா், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இருளா் பழங்குடியினருக்காக ரூ.4.05 கோடியில் கட்டப்பட்டு வரும் 80 குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தி குடியிருப்புகள் கட்டும் பணியை விரைந்து, அதேநேரம் தரமாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும் காட்டராம்பாக்கத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவா்கள் குடியிருப்புகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

இளையனாா் வேலூா் முருகன் கோயில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாலாஜாபாத் அருகே உள்ள இக்கோயிலில் மாகறன், மலையன் என்ற இரு அசுரா்களை வேல்கொ... மேலும் பார்க்க

குபேர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சின்ன காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் தேரோட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது அவதார திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியள... மேலும் பார்க்க

மே 16-இல் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்கம்

காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் கோடை கால சைவ சித்தாந்த தொடா் இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 16 முதல் 24 வரை நடைபெற இருப்பதாக ஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வியாழக்கி... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு: 13-ஆவது முறையாக தீா்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள ... மேலும் பார்க்க

பரணிபுத்தூா் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூா் ஒன்றியம், பரணிபுத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு ஆகியோா் கலந்து கொண்டு தூய்மை பணியாளா... மேலும் பார்க்க