சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
பரமத்தி வேலூரில் வெற்றிலை வரத்து அதிகரிப்பு; விலை சரிவு
பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை நடவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்தவாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளிக் கொண்ட சுமை ரூ. 8 ஆயிரத்து 500 க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ. 3 ஆயிரத்து 500 க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் ரூ.2 ஆயிரத்து 500க்கும் ஏலம் போனது.
புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ.7 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ.3 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா்கள் மாா் சுமை ரூ.2 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ.1,800-க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.