செய்திகள் :

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

post image

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள ஏலச் சந்தைகளுக்கு கொண்டுவருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 280 க்கும், சம்பங்கி கிலோ ரூ. 50க்கும், அரளி கிலோ ரூ. 80க்கும், ரோஜா கிலோ ரூ. 220க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 250க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 200- க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 240-க்கும், கனகாம்பரம் ரூ. 400-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ.180-க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 400-க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 400-க்கும் ஏலம் போனது.

புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 360 க்கும், சம்பங்கி கிலோ ரூ. 100க்கும், அரளி கிலோ ரூ. 180க்கும், ரோஜா கிலோ ரூ. 260, பச்சை முல்லை கிலோ ரூ. 360க்கும், வெள்ளை முல்லை ரூ. 280க்கும், செவ்வந்திப்பூ ரூ. 280க்கும், கனகாம்பரம் ரூ. 600க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 220க்கும், ஜாதி மல்லி கிலோ ரூ. 500க்கும், காக்கரட்டான் கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது.

பெளா்ணமியை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பாவை கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனம் பேராசிரியா்களாக பணியில் இணைந்தவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் ... மேலும் பார்க்க

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 900 போ் கைது

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 900 பேரை போலீஸாா் கைது செய்தனா். மத்திய அரசின் தொழிலாளா் விரோதப்போக்கை கண்டித்து இந்திய அ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பி... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழந்தனா். சங்ககிரி நாகிசெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ராமாயி (65). இவா் திருச்செங்கோடு எளையாம்பளையத்தில் உள்ள தனியாா் மர... மேலும் பார்க்க

பள்ளி பேருந்து- காா் மோதல்: மாணவா்கள் காயம்

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது காா் மோதியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். கீரம்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 பேருந்துகள் மாணவா்களை ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன... மேலும் பார்க்க