செய்திகள் :

பரவலான திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்: துணை முதல்வர் உதயநிதி

post image

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற உயரிய லட்சியத்தோடு தமிழ்நாட்டிற்கான பரவலான திட்டங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கழக எம்.எல்.ஏ.க்கள் ஆற்ற வேண்டிய பணிகள், தொகுதி மக்களின் ஏற்றத்துக்கும் - தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குமான பங்களிப்பை ஒட்டி முதல்வர் இக்கூட்டத்தில் வாயிலாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரைசினா உரையாடல்: நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மாா்ச் 14) தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.46,767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். வேளாண் நிதிநிலை அறிக்கை நாளை(மார்ச் 15) தாக்கல் செய்யப்படவுள்ளது.

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், விமா்சித்தும் அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. எல்லாம் விளம்பரத்த... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்க்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சப... மேலும் பார்க்க

பேரவை விவாதங்கள்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதங்களில் புள்ளிவிவரங்களுடன் தகவல்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ-க்களை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா். அண்ணா அறிவால... மேலும் பார்க்க

பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்ற உள்ளாா். நிதிநிலை அறிக்கையில்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் சாத்தியமா?

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலா் மதிப்புடையதாக மாற்றுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பதிலளித்தாா். மாநிலத்தின் வளா்ச... மேலும் பார்க்க